இந்திய வரைபடத்திலிருந்தே காவிரி படுகை காணாமல் போகக்கூடும்: பேராசிரியர் ஜெயராமன் திடுக்!
இந்திய வரைபடத்திலிருந்தே காவிரி படுகை காணாமல் போகக்கூடும் என பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
திருச்சி: இந்திய வரைபடத்திலிருந்தே காவிரி படுகை காணாமல் போகக்கூடும் என பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் எண்ணெய் கிணறுகள் அமைத்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த மே மாதம் முதல் பராமரிப்பு பணியில் ஈடுபட்டது. குழாய்களை மாற்றும் பணியின் போது ஏற்பட்ட கசிவால் அப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு குடிப்பதற்கே முடியாத நிலை ஏற்பட்டது. இதனைக் கண்டித்து கிராம மக்கள் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 10 பேர்
இதைத்தொடர்ந்து பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன. அவர்களை விடுவிக்கக்கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

10 பேருக்கும் நிபந்தனை ஜாமீன்
இந்நிலையில் அண்மையில் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேருக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரும் திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

அரசு கனிவோடு பார்க்க வேண்டும்
ஜாமினில் விடுதலையான பேராசிரியர் ஜெயராமன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சமூக அக்கறையோடு போராடுவோரைத் தமிழக அரசு கனிவோடு பார்க்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

வரைபடத்திலிருந்தே காணாமல் போய்விடும்
வருங்கால சந்தத்தியினரைப் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது என்றும் பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்தார். காவிரி படுகை இந்திய வரைபடத்திலிருந்தே காணாமல் போகக்கூடிய சூழல் உருவாகியுள்ளது என்றும் ஜெயராமன் கூறியுள்ளார்.

மத்திய அரசு சொல்வதையெல்லாம்..
மத்திய அரசு சொல்வதையெல்லாம் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது என்றும் பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்துள்ளார். தமிழக மக்களையும் விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications