காவிரி பிரச்சினை: சென்னையில் ஐஓசி அலுவலகம் மீது கல் வீச்சு
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சினையில் மவுனம் சாதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ன்னையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பிராந்திய அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், கர்நாடகா தொழில் நிறுவனங்கள், வங்கிகள் மட்டுமின்றி, மத்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் போலீஸ் காவல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் 8 பேர் கொண்ட மர்மகும்பல் இங்கு சென்றனர். திடீரென அவர்கள், மத்திய அரசு மற்றும் மோடியை கண்டித்து முழக்கமிட்டனர்.
பின்னர், கற்கள் மற்றும் உருட்டுக்கட்டை ஆகியவ்றறை சரமாரியாக வீசினர். இதில், அந்த கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. தகவலறிந்த தேனாம்பேட்டை போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றனர். அதற்குள், மர்மகும்பல் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதையடுத்து போலீசார், அந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், மர்ம கும்பலின் உருவம் பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications