கோடி, கோடியா ஒதுக்கியும் எங்களுக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை: சென்னைவாசிகள் கவலை
சென்னை: தமிழக அரசு உணவு, போர்வை என்று எதுவும் தர வேண்டாம் வீடுகளை சுற்றி தேங்கியுள்ள கழிவுநீர், குப்பைகளை அகற்றினாலே போதும் என்று சென்னை மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
வரலாறு காணாத மழையால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள், தன்னார்வலர்கள் உணவு, போர்வை, தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார்கள்.
வெள்ளம் வடிந்துள்ள நிலையில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியிருப்பதுடன், குப்பைகளும் சேர்ந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் கூறுகையில்,

வெள்ளத்தில் வீடுகளை இழந்து தெருவில் நிற்கிறோம். அரசு சார்பில் இதுவரை எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. சில புண்ணியவான்கள் அளிக்கும் உணவையும் எங்களுக்கு கொடுக்கவிடாமல் ஆளுங்கட்சியினர் தகராறு செய்கிறார்கள்.
சாலைகளில் கூட்டம் சேர்வதாகக் கூறி எங்களை விரட்டியடிக்கிறார்கள். வீடுகளை இழந்துள்ள நாங்கள் எங்கு செல்வோம். எங்கள் குழந்தைகளுக்கு திடீர் என காய்ச்சல் ஏற்படுகிறது. எங்கள் வீடுகளை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.
வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு பலியாகி கிடந்த ஆடு, மாடுகளை நாங்கள் தான் அப்புறப்படுத்தினோம். அரசு எங்களுக்கு உணவு எல்லாம் கொடுக்க வேண்டாம். அதை சில புண்ணியவான்கள் செய்கிறார்கள். கழிவுநீர் மற்றும் குப்பையை அகற்றி இடத்தை சுத்தம் செய்து கொடுத்தாலே போதும்.
ஏதோ கோடி, கோடியா ஒதுக்கியதாக சொல்கிறார்கள். ஆனால் எங்களுக்கு ஒரு பைசா கூட இதுவரை கிடைக்கவில்லை என்றனர்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications