சென்னை: கலவர மாணவர்களை கண்காணிக்க 45 பறக்கும் போலீஸ் படை
சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே பேருந்துகளில் ஏற்படும் மோதலை கட்டுப்படுத்தவும், கலவரம் செய்யும் மாணவர்களை கண்காணிக்கவும் 45 பறக்கும் போலீஸ் படை ஏற்படுத்துள்ளது.
சென்னையில் மாணவர்கள் கத்தி, அரிவாள், உருட்டுகட்டை, கற்களால் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கின்றன. இந்த மோதல் சம்பவங்களில் பஸ் ஊழியர்கள், பொதுமக்கள் தாக்கப்படுகிறார்கள். மாணவர்களின் கலவரத்தை அடக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளார்.

அதன்படி, சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படைக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமை ஏற்றுள்ளார். 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 5 போலீசார் ஒவ்வொரு படையிலும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் மாணவர்கள் பஸ்களில் பயணம் செய்யும் பகுதிகளில் தினமும், காலையிலும், மாலையிலும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இந்த கண்காணிப்பு பறக்கும் படை தென் சென்னையில் 15 படைகளும், கிழக்கு சென்னை, வடசென்னை, மேற்கு சென்னையில் தலா 10 படைகள் வீதமும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முதல் இவர்கள் தங்கள் கண்காணிப்பு வேட்டையை தொடங்கி விட்டனர். இந்த பறக்கும் படை போலீசார் தகராறு செய்யும் மாணவர்களை உடனடியாக கைது செய்வார்கள். கலாட்டா செய்யும் மாணவர்களை ரகசியமாக வீடியோ படமும் எடுப்பார்கள்.
பஸ்களில் கல்வீசி சேதம் விளைவித்தாலோ, வேறு பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தினாலோ, பொதுமக்களுக்கு இடையூறு செய்தாலோ, யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications