சென்னை: கலவர மாணவர்களை கண்காணிக்க 45 பறக்கும் போலீஸ் படை
சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே பேருந்துகளில் ஏற்படும் மோதலை கட்டுப்படுத்தவும், கலவரம் செய்யும் மாணவர்களை கண்காணிக்கவும் 45 பறக்கும் போலீஸ் படை ஏற்படுத்துள்ளது.
சென்னையில் மாணவர்கள் கத்தி, அரிவாள், உருட்டுகட்டை, கற்களால் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கின்றன. இந்த மோதல் சம்பவங்களில் பஸ் ஊழியர்கள், பொதுமக்கள் தாக்கப்படுகிறார்கள். மாணவர்களின் கலவரத்தை அடக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளார்.

அதன்படி, சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படைக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமை ஏற்றுள்ளார். 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 5 போலீசார் ஒவ்வொரு படையிலும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் மாணவர்கள் பஸ்களில் பயணம் செய்யும் பகுதிகளில் தினமும், காலையிலும், மாலையிலும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இந்த கண்காணிப்பு பறக்கும் படை தென் சென்னையில் 15 படைகளும், கிழக்கு சென்னை, வடசென்னை, மேற்கு சென்னையில் தலா 10 படைகள் வீதமும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முதல் இவர்கள் தங்கள் கண்காணிப்பு வேட்டையை தொடங்கி விட்டனர். இந்த பறக்கும் படை போலீசார் தகராறு செய்யும் மாணவர்களை உடனடியாக கைது செய்வார்கள். கலாட்டா செய்யும் மாணவர்களை ரகசியமாக வீடியோ படமும் எடுப்பார்கள்.
பஸ்களில் கல்வீசி சேதம் விளைவித்தாலோ, வேறு பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தினாலோ, பொதுமக்களுக்கு இடையூறு செய்தாலோ, யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications