ரயிலில் ரூ. 5.75 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி உத்தரவு
சென்னை: ஓடும் ரயிலில் ரூ.5.75 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, எழும்பூர் ரயில் நிலைய போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சேலத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ரூ.342 கோடியில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ரயில்வே பாதுகாப்பு படையினர் 10க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொள்ளை நடந்த ரயிலை தமிழக காவல் துறை தலைவர் அசோக்குமாரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணைளில் 4 பேர் கொண்ட கும்பல் பணத்தை கொள்ளையடித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மேலும், ரயிலின் மேற்கூரையில் ஒரு நபர் நுழையும் அளவுக்கு துளை போடப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் நடந்து 48 மணி நேரம் ஆகியும் எந்த துப்பும் கிடைக்காத காரணத்தினால், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலைய போலீசாருக்கு இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கு, எழும்பூர் ரயில்வே போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணையை விரிவுப்படுத்த வேண்டியுள்ளதால் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளை நடந்த ரயில் பெட்டியை ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் பகத் ஆய்வு மேற்கொண்டார். மேலும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சிபிசிஐடி, ஐஐி மகேஷ்குமார் அகர்வால் நேரில் ஆய்வு செய்தார். ரயிலில் பயணம் செய்த அதிகாரிகளுடனும் விசாரணை நடத்தினார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications