நாட்ல எந்த "பி.சி." க்கும் பாதுகாப்பு இல்லை...அப்பப்பா!
ப.சிதம்பரம் வீட்டில் நடந்த சிபிஐ ரெய்டு, வான்னாகிரை வைரஸ் தாக்குதலால் கணினிகள் பாதிக்கப்படுவதையும் இணைந்து நாட்டில் எந்த பி.சி.க்கும் பாதுகாப்பு இல்லை என்பதே இன்றைய ஹாட் டாபிக்.
சென்னை: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நடந்த சிபிஐ ரெய்டு, வான்னாக்ரை வைரஸ் தாக்குதல் ஆகியவற்றை கோர்த்துவிட்டு நாட்டில் எந்த பி.சி.க்கும் பாதுகாப்பு இல்லை என்று சமூகவலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் வான்னாக்ரை என்ற புதிய வைரஸ் தாக்குதல் கம்ப்யூட்டர்களை ஒரு கை பார்த்து வருகின்றன. இவற்றை ஹேக்கர்கள் பணம் பறிக்கும் நோக்கில் ஏவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வைரஸ்கள் மின்னஞ்சல் அல்லது கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் தாக்கப்படுகின்றன. இவை முதலில் கம்ப்யூட்டர்களை செயலிழக்க வைக்கும். அதற்கான கீயை பணம் கொடுத்தால் ஹேக்கர்கள் தருவர். இந்த வைரஸால் உலகம் முழுவதும் 99 நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கூட இந்த வான்னாக்ரை வைரஸ் பரவியுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டிலும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தியது. 14-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது.
இந்த இரு சம்பவங்களையும் வைத்து சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். அதாவது சிதம்பரத்தின் பெயரை ஆங்கிலத்தில் சுருக்கமாக பி.சி. என்றழைப்பர். அதேபோல பர்சனல் கம்ப்யூட்டர்கள் எனப்படும் கணினிகளையும் ஆங்கிலத்தில் பி.சி. என்றே அழைப்பர்.
இதை வைத்து நாட்டில் எந்த பி.சி.க்கும் பாதுகாப்பே இல்லை என்று நெட்டிசன்கள் செமையாக கலாய்த்து வருகின்றனர். என்னே! ஒரு நகைச்சுவை திறன் இந்த நெட்டிசன்களுக்கு!!
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications