தனுஷ்கோடியில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 685 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தபப்படவிருந்த 685 கிலோ கஞ்சாவை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடலோர காவல்படையினர் திங்கட்கிழமை தனுஷ்கோடி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மூன்றாம் திடப்பகுதியில் இலங்கைக்கு கடத்திச் செல்ல யாரோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் மூன்றாம் திடப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 685 கிலோ கஞ்சா மூட்டைகள் சிக்கின. அதன் மதிப்பு ரூ.5 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கஞ்சா மட்டும் தான் பறிமுதல் செய்யப்பட்டது. அதை யார் இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்தது என தெரியவில்லை. இது குறித்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு பல கிலோ கஞ்சா கடத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications