உவ்வே... 'கேஎப்சி' சிக்கனுக்குள் புழு கண்டெடுப்பு- கோவையில் அதிர்ச்சி
கோவை: கேஎப்சி நிறுவனத்தில் வாங்கிய சிக்கனுக்குள் புழு இருந்தது கோவையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்திலும் இதேபோன்ற ஒரு சம்பவம் இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்துள்ள நிலையில், கோவை சம்பவத்தால், இந்தியாவில் வீக் எண்ட் வியாபாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்திலுள்ளது கேஎப்சி.

பக்கெட் சிக்கன்
கோவை, ராம்நகர், காளிங்கராயன் வீதியை சேர்ந்தவர் யாசர் அராபத் (23). இவர் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆர்.எஸ்.புரம், டி.பி.சாலையிலுள்ள கேஎப்சி சிக்கன் விற்பனையகத்தில் மதியம் இவர் ஒரு 'பக்கெட்' சிக்கனும், கூல்ட்ரிங்சும் ரூ.640க்கு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

உவ்வ.. புழு..
வீட்டில் குடும்பத்தார் அனைவரும் அதை ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சிக்கன் துண்டு ஒன்றில் சுருண்ட நிலையில் புழு இருந்ததை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கேஎப்சிக்கு, யாசர் அராபத் தகவல் கொடுத்துள்ளார்.

கேஎப்சி அலட்சியமா..?
கேஎப்சியில் இருந்து வந்தவர்கள் சிக்கன் ஆர்டரை மாற்றி புதிதாக வேறு தருவதாக கூறியுள்ளனர். ஆனால் யாசர் அராபத்தோ, இந்த சிக்கனை குழந்தைகளும் சாப்பிட்டு ஏதாவது உடல் நலக்கோளாறு ஆகியிருந்தால் அதற்கு யார் பதில் சொல்வார்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு கேஎப்சி சார்பில் சரியான பதில் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

புகார் அளித்த வாடிக்கையாளர்
கேஎப்சியின் பதிலால் கோபமடைந்த யாசர் அராபத், கோவை உணவு பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சிக்கனை ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஆய்வு முடிவு வந்ததும் நடவடிக்கை
இதுகுறித்து கோவை உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரி, கதிரவன் கூறுகையில், சிக்கன் மாதிரி எங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் வைத்து ஆய்வு நடந்துவருகிறது. ஆய்வு முடிவை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சம்மந்தப்பட்ட கேஎப்சி கடையில் உணவு பாதுகாப்பு வழிமுறைகள் பாதுகாக்கப்படுகிறதா என்பதை அறிய, அதிகாரிகள் குழு சோதனை நடத்த உள்ளது என்றார்.

இது புதிதில்லையே..
2012ம் ஆண்டில் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கேஎப்சி சிக்கன் விற்பனையகத்தில் இதுபோல புழு கண்டெடுக்கப்பட்டதும், அதன்பிறகு அந்த கேஎப்சி கிளை மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
-
கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணுங்க.. ரயில்வே அப்டேட் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்!












Click it and Unblock the Notifications