கல்வித் துறையில் தலைவிரித்தாடும் ஊழலால் 3 மாணவிகளின் உயிர் பறிபோயுள்ளது: வைகோ
சென்னை: கல்வித்துறையில் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்து ஆடுவதால், மூன்று மாணவிகளின் உயிர் பறிபோய் இருக்கிறது. ஜெயலலிதா அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விழுப்புரம் மாவட்டம்- சின்னசேலம் அருகில் பங்காரத்தில் இயங்கி வந்த இயற்கை மற்றும் சித்த மருத்துவக்கல்லூரி மாணவிகள் மூவர் தற்கொலை செய்துகொண்ட துயர நிகழ்ச்சி அதிர்ச்சி அளிக்கிறது.

எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரியில் உரிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும் விதிமுறைகள் பின்பற்றப்படாததாலும் இக்கல்லூரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டது. திருவாரூரைச் சேர்ந்த பிரியங்கா, சென்னையை சேர்ந்த மோனிஷா, காஞ்சிபுரம் செய்யூரைச் சேர்ந்த சரண்யா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தலா 2 இலட்சம் ரூபாய் அளித்துவிட்டு, இந்தக் கல்லூரியில் இயற்கை மற்றும் சித்த மருத்துவம் பயின்று வந்தனர். இரண்டாம் ஆண்டில் பயின்ற மாணவிகள் அடிப்படை வசதிகள் இன்றி, சரிவர செயல்படாத இக்கல்லூரி நிர்வாகம் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து காவல்துறையிடமும புகார் மனு அளித்தனர்.
இதனையடுத்து மாணவிகளிடம் பெற்ற கட்டணத் தொகை மற்றும் சான்றிதழ்களை திருப்பி அளிக்குமாறு எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருக்கிறார். ஆனால், ஆட்சியரின் உத்தரவை ஏற்காமல், கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக இருந்தது.
பல்வேறு சிரமங்கள், குடும்பப் பொருளாதார சுமைகளுக்கு மத்தியில் இரண்டு இலட்சம் ரூபாய் செலுத்தி ஏமாற்றம் அடைந்த மாணவிகள் பிரியங்கா, மோனிஷா, சரண்யா மூவரும் ஒன்றாக கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கண்ட கனவுகள் ஒரு நொடியில் சிதைந்துவிட்டன. இந்தக் குடும்பங்களுக்கு எப்படி ஆறுதல் கூற முடியும்?
அடிப்படை வசதிகள் இல்லாமல் தொடங்கப்பட்ட இக்கல்லூரிக்கு அரசு அனுமதி வழங்கியது ஏன்?
கல்வித்துறையில் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்து ஆடுவதால், மூன்று மாணவிகளின் உயிர் பறிபோய் இருக்கிறது. ஜெயலலிதா அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
சின்னசேலம் பங்காரத்தில் செயல்பட்டு வரும் எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசு விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாணவிகளின் தற்கொலைக்குக் காரணமான கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications