காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க கோவையில் இருந்து விமான படை ஹெலிகாப்டர்கள் புறப்பட்டன
Recommended Video
தேனி: தேனி மலையில் காட்டுத்தீக்குள் சிக்கியுள்ள கல்லூரி மாணவிகளை மீட்க இந்திய விமானப்படை வீரர்கள் விரைகிறார்கள். தமிழக முதல்வர் கோரிக்கையை ஏற்று விமானப்படை உதவி அளிக்கப்படுகிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தேனி - போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் பயங்கர காட்டுத் தீயில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
— O Panneerselvam (@OfficeOfOPS) March 11, 2018
ஹெலிகாப்டரில் சென்று ரசாயனங்களை தூவி தீயை அணைப்பதோடு, ஹெலிகாப்டரில் மாணவிகளை மீட்கவும் இந்த நடவடிக்கை உதவும். இதனிடையே, தேனி மாவட்டத்தில் தீ விபத்து பாதித்த இடத்திற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் விரைந்தார்.
அமைச்சர் சீனிவாசன், மாவட்ட கலெக்டர் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீயணைப்பு வீரர்களுடன், போலீசாரும் மீட்பு பணியில் குதித்துள்ளனர்.
Responding to the request from the Hon @CMOTamilNadu on the forest -fire related issue -20 students are caught in Kurangani, Theni district. Instructed @IAF_MCC to help in rescue and evacuation. The Southern Command is in touch with the Collector of Theni. @ThanthiTV @pibchennai
— Nirmala Sitharaman (@nsitharaman) March 11, 2018
காட்டுத் தீ என்பது மிகவும் மோசமானது என்பதால், ஹெலிகாப்டரில் இருந்து ரசாயனங்களை தூவி தீயை அணைப்பதே சிக்கியுள்ள 40க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை மீட்க முடியும் என தெரிகிறது.
3. @IAF_MCC helicopter கள் தீயணைப்பு முயற்சியிலும் தேனி மாவட்ட ஆட்சியாளரின் தேவைக்கு ஏற்ப உதவியளிக்க தயார். கோயம்புத்தூர் அருகேயுள்ள சூலூரிலிரிந்து helicopterகள் அனுப்பிவைத்துள்ளனர். @CMOTamilNadu @pibchennai @ThanthiTV @gennowmedia #குரங்கணிதீ
— Nirmala Sitharaman (@nsitharaman) March 11, 2018
இந்த நிலையில் தற்போது காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளது.கோவை சூலூர் விமான படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளது.