காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க கோவையில் இருந்து விமான படை ஹெலிகாப்டர்கள் புறப்பட்டன
Recommended Video

தேனி: தேனி மலையில் காட்டுத்தீக்குள் சிக்கியுள்ள கல்லூரி மாணவிகளை மீட்க இந்திய விமானப்படை வீரர்கள் விரைகிறார்கள். தமிழக முதல்வர் கோரிக்கையை ஏற்று விமானப்படை உதவி அளிக்கப்படுகிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தேனி - போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் பயங்கர காட்டுத் தீயில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
— O Panneerselvam (@OfficeOfOPS) March 11, 2018
ஹெலிகாப்டரில் சென்று ரசாயனங்களை தூவி தீயை அணைப்பதோடு, ஹெலிகாப்டரில் மாணவிகளை மீட்கவும் இந்த நடவடிக்கை உதவும். இதனிடையே, தேனி மாவட்டத்தில் தீ விபத்து பாதித்த இடத்திற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் விரைந்தார்.

அமைச்சர் சீனிவாசன், மாவட்ட கலெக்டர் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீயணைப்பு வீரர்களுடன், போலீசாரும் மீட்பு பணியில் குதித்துள்ளனர்.
Responding to the request from the Hon @CMOTamilNadu on the forest -fire related issue -20 students are caught in Kurangani, Theni district. Instructed @IAF_MCC to help in rescue and evacuation. The Southern Command is in touch with the Collector of Theni. @ThanthiTV @pibchennai
— Nirmala Sitharaman (@nsitharaman) March 11, 2018
காட்டுத் தீ என்பது மிகவும் மோசமானது என்பதால், ஹெலிகாப்டரில் இருந்து ரசாயனங்களை தூவி தீயை அணைப்பதே சிக்கியுள்ள 40க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை மீட்க முடியும் என தெரிகிறது.
3. @IAF_MCC helicopter கள் தீயணைப்பு முயற்சியிலும் தேனி மாவட்ட ஆட்சியாளரின் தேவைக்கு ஏற்ப உதவியளிக்க தயார். கோயம்புத்தூர் அருகேயுள்ள சூலூரிலிரிந்து helicopterகள் அனுப்பிவைத்துள்ளனர். @CMOTamilNadu @pibchennai @ThanthiTV @gennowmedia #குரங்கணிதீ
— Nirmala Sitharaman (@nsitharaman) March 11, 2018
இந்த நிலையில் தற்போது காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளது.கோவை சூலூர் விமான படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications