ரூபாய் நோட்டு பற்றாக்குறையால் மற்றொரு அவலம்.. அரிசி விலை கிடுகிடு உயர்வு
ரூபாய் நோட்டு விவகாரத்தினால் ஆலைகளில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி சன்ன ரக அரிசி சந்தையில் ரூ.55 முதல் 60 வரை விற்கப்படுகிற அவலம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டதினால் சாதாரண மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் உற்பத்தி பாதிப்பினால் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக கருதப்படும் உணவுப் பொருளான அரிசியின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏழை-எளிய மக்கள் மேலும் இடர்களை சந்திக்கும் அவலம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் இன்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் கருகி வருகிறது.

இதன் காரணமாக கடன் பெற்று விவசாயம் செய்து நஷ்டம் அடைந்த 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும், நெல் சாகுபடியும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
அரிசி ஆலைகளுக்கு முன்பு போல் போதிய நெல்வரத்தும் இல்லை. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் நெல் கொண்டு வரப்பட்டு ஆலைகளில் அரைத்து அரிசி விற்பனை நடைபெறுகிறது. இந்த சூழலில் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரச்சினையால் அரிசி ஆலைகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நெல் மூட்டைகளுக்கு கொடுக்க போதிய பணம் இல்லை. இது மட்டுமின்றி தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க போதிய பணம் இல்லாத சூழல் உருவாகி உள்ளதால் பல அரிசி ஆலைகள் மூடிக்கிடக்கிறது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு மோட்டா ரக அரிசி கிலோ ரூ.26, சன்னரக அரிசி (பொன்னி) அதிகபட்சமாக ரூ.45 முதல் 50 வரை விற்கப்பட்டது.
ஆனால், இப்போது மோட்டார் ரக அரிசி சில்லரையில் கிலோ ரூ.32-க்கும், சன்ன ரக அரிசி அதிகபட்சமாக ரூ.55 முதல் 60 வரை விற்கப்படுகிறது.
இதில் 1 கிலோ ஒயிட் பொன்னி 64 ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது. இட்லி அரிசி கிலோ ரூ.35 முதல் 40 வரை விற்கப்படுகிறது.
இதுதொடர்பாக காஞ்சீபுரம் அரிசி ஆலை உரிமையாளர் ஓருவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தான் அதிக அளவு நெல் வரவழைக்கப்படுகிறது. இப்போது இங்கிருந்தும் நெல் அதிகம் வராததால் மேற்கு வங்காளத்தில் இருந்து நெல் கொண்டு வரப்பட்டு ஆலைகளில் அரவை நடைபெறுகிறது.
ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்சினையால் கொள்முதலுக்கு உடனடியாக பணம் கொடுக்க முடியவில்லை. விற்பனையும் இல்லை வசூலும் குறைந்து விட்டது. 20 நாட்களாக அரிசி ஆலைகள் ஓடாமல் உள்ளது. கையிருப்பில் உள்ள அரிசிகளைதான் விற்பனை செய்து வருகிறோம். ரூபாய் நோட்டு பிரச்சினை சீராகாமல் உள்ளதால் வியாபாரம் முடங்கி உள்ளது என கூறினார்.
ரூபாய் நோட்டு பிரச்சினையால் அரிசி ஆலைகளுக்கும் பாதிப்புதான் உள்ளது. இதனால் நெல் மண்டிகளில் கைவசம் உள்ள அரிசிகளை விற்பனை செய்து வருகிறார்கள். அரிசி விலை ஏற்றம் என்பது தற்காலிகமானது தான். நெல் வரத்து அதிகரிக்கும் போது விலை தானாக குறைந்து விடும் என்று மற்றொருவர் கூறினார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications