அரசுக்கு எதிராக சதி செய்தவர்.. ஓபிஎஸ் மீது தினகரன் குற்றச்சாட்டு
சட்டசபையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்க அனுமதி மறுக்கப்படுவதாக வெளிநடப்பில் ஈடுபட்ட தினகரன், தமிழக அரசு கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கி தவிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள தினகரன், சட்டசபையில் தொடர்ந்து தமக்கு பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றை தொடர்ந்து இன்றும் வெளிநடப்பில் ஈடுபட்ட ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ தினகரன், சட்டசபையில் தனக்கு பேச தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவதாக கூறினார்.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டசபையில் தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்தும் அதற்கு அனுமதி வழங்க சபாநாயகர் மறுத்து வருவதாக கூறினார். மேலும் பேசிய அவர், தமிழக அரசு கடுமையான நிதி பற்றாக்குறையில் சிக்கி தவிப்பதாக தெரிவித்தார்.
போக்குவரத்து துறை மட்டுமின்றி அனைத்து துறைகளும் நிதி பற்றாக்குறையில் சிக்கித்தவிக்கும் தினகரன் கூறினார். ஆனால் இதையெல்லாம் எடப்பாடி அரசு மறைத்து நாடகமாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் தன்னை துணைப் பொதுச்செயலாளராக தற்போதை அமைச்சர்கள் தான் முன்மொழிந்ததாக குறிப்பிட்ட அவர், சில அமைச்சர்களின் சதியால் தான் தாம் கட்சியிலிருந்து தனித்து விடப்பட்டதாக கூறினார். அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சரமாரியாக விமர்சித்த தினகரன், இந்த அரசுக்கு எதிராக சதி செய்தவர்களே தற்போது அதை காப்பாற்றுவதைப் போல நடிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications