முதல்வர் எடப்பாடியார் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் 'பரபர' ஆலோசனை! - வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இதிலிரட்டை இலை மீட்பு, கட்சி பதவி மாற்றம்குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் மூன்று நாட்கள் நடைபெறும்.
அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அனி,ஒபிஎஸ் அணி என்று இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. மேலும் அதிமுகவின் சின்னம் இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.

முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்க பிளவுபட்டுள்ள இரு கோஷ்டிகளும் இணைய வேண்டும் என்கிற கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆனால், ஒரு கோஷ்டிகளும் அதிமுக இணைப்புப் பேச்சு வார்த்தைக்கு குழு அமைத்தும், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஒபிஎஸ் அணியினர் ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும், சசிகலா கட்சியில் இருந்து முற்ரிலும் அப்புறப்படுத்தபப்டட் வேண்டும் என கோரி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் இரட்டை இலையை மீட்பது, கட்சி பதவிகள் குறித்து பிரமாண பத்திரங்களில் மாற்றம் செய்வது ஆகிய விஷயங்கள் கூட்டத்தில் ஆலோசிக்கபப்டுகிறது.
இந்தக் கூட்டம் மூன்று நாட்கள் நடைபெறும். ஆகையால அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்க வேண்டுமென அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications