எடப்பாடியார் அரசில் சத்துணவு ஆயா வேலைக்கு கூட ரூ.3 லட்சம் லஞ்சம்.. திவாகரன் அட்டாக்
தமிழகத்தில் தற்போது நடைபெறும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் சத்துணவு ஆயா வேலைக்குக் கூட ரூ. 3 லட்சம் லஞ்சமாகப் பெறப்படுகிறது என்று சசிகலா சகோதரர் திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை: எடப்பாடியார் ஆட்சியில் சத்துணவு ஆயா வேலைக்குக் கூட 3 லட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெறப்படுகிறது என்று திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என அணிகள் பிரிந்து இருக்கும் நிலையில் டிடிவி தினகரன் தனது பலத்தை நிரூபிக்க நாளை மதுரை மேலூரில் பொதுக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
பொதுக் கூட்டம் நடைபெற உள்ள இடத்தைத் திவாகரன் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

முனுசாமி பேச்சைக் கேட்டு எதிர்ப்பு
முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் பேச்சைக் கேட்டு ஓபிஎஸ் எங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். நாங்கள் யாரும் அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

ஓபிஎஸ்ஸுடன் தொடர்பில் இருக்கிறேன்
நான் இன்னும் ஓபிஎஸ்ஸுடன் தொடர்பில் இருக்கிறேன். நான் அடிக்கடி அவரை தொலைப்பேசியில் அழைத்து கட்சி ஒன்றாக வேண்டும் என்பது குறித்து பேசி வருகிறேன். அவர் என்னிடம் பேசும் போது நல்லவிதமாகவே பேசுகிறார். ஆனால், அவர் என்ன முடிவெடுக்க உள்ளார் என்பது எதிர்காலத்தில்தான் தெரிய வரும்.

சிறைக்குச் சென்ற சசிகலா குடும்பம்
சசிகலா குடும்பம் யாருக்கும் காவடி எடுக்கவில்லை. தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு அரசியல் மாற்றத்தின் போதும் சசிகலா குடும்பம் சிறைக்குத்தான் சென்றுள்ளது. இந்தக் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரின் மீதும் வழக்குகள் தொடரப்பட்டு சிறைக்குச் சென்றிருக்கிறோம்.

ஆயா வேலைக்கு லஞ்சம்
தமிழகத்தில் இன்று சத்துணவு ஆயா வேலைக்குப் போகிறவரிடம் கூட 3 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுகிறது. இதெல்லாம் காதில் வாங்கும் போது எங்களுக்கு வேதனையாக உள்ளது என்று திவாகரன் தெரிவித்தார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications