மாப்ளே, டிரெய்னைப் பிடிக்கனும் ஓடு, ஓடு.. தீபாவளியால் களை கட்டிய ரயில் நிலையங்கள்!
சென்னை: தீபாவளி வந்து விட்டது. சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகளின் கூட்டத்தால் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் கூட்டம் அலை மோத ஆரம்பித்து விட்டது.
பலர் வெள்ளிக்கிழமையே கிளம்பிச் சென்று விட்டனர். இன்னும் பலர் சனிக்கிழமை கிளம்பிப் போனார்கள். பலர் நேற்று இரவு ஊர்களுக்குப் படையெடுத்தனர். ஆனால் இன்று முதல்தான் கூட்டம் கட்டுக்கடங்காத நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
நாளை இரவெல்லாம் பஸ் நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் எள்ளைப் போட்டால் எள்ளுருண்டையாக வரும் அளவுக்கு கூட்டம் கிடுகிடுக்கும்.

எழும்பூர்
சென்னையில் தீபாவளி சமயத்தில் மிகப் பெரிய அளவில் பயணிகள் கூட்டம் அலை மோதும் ரயில் நிலையமாக சென்னை எழும்பூர்தான் விளங்கும்.

தென் மாவட்ட மக்கள்
காரணம், தென் மாவட்டங்களுக்கான ரயில்கள் அனைத்தும் எழும்பூரிலிருந்துதான் கிளம்பிச் செல்கின்ன. எனவே சென்டிரல் ரயில் நிலையத்தை விட இங்குதான் கூட்டம் கட்டி ஏறும்.

தீபாவளி கூட்டம் ஜோர்
தற்போது தீபாவளிக்காக மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் மக்கள் கூட்டம் எழும்பூர் ரயில் நிலையத்தில் அலை மோதுகிறது.

பிளாட்பாரம் முழுவதும் மக்கள் கூட்டம்
பிளாட்பாரங்கள் அனைத்தும் நிரம்பி வழியும் அளவுக்கு தீபாவளிக் கூட்டம் அலை மோதுகிறது.

அன் ரிசர்வ்ட் பெட்டிகளுக்கு நீண்ட கியூ
முன்பே முன்பதிவு செய்து வைத்து விட்டுத்தான் பெரும்பாலான பயணிகள் வருகின்றனர் என்றாலும் டிக்கெட் கிடைக்காமல் அன் ரிசர்வ்ட் பெட்டிகளில் பயணிக்கும் கூட்டமும் அதே அளவில் திரண்டு வருகிறது. இவர்களை நீண்ட கியூ வரிசையில் நிறுத்தி போலீஸார் பெட்டிகளில் ஏற வழி செய்கின்றனர்.

ரிசர்வ்ட் பெட்டிகளிலும் எமக் கூட்டம்
அதேசமயம் வைகை உள்ளிட்ட பகல் நேர ரயில்களில் ரிசர்வ்ட் பெட்டிகளிலும் கூட முன்பதிவு செய்யாமல் கரண்ட் டிக்கெட் வாங்கியவர்கள் பெருமளவில் ஏறிப் பயணிக்கின்றனர். இதனால் ரயில் முழுவதும் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

நாளை நிற்கக் கூட இடம் இருக்காது
நாளைக்கு நிற்கக் கூட இடம் இருக்காது என்று கூறும் அளவுக்கு ரயில் பெட்டிகள் பெரும் கூட்டத்துடன் பயணிக்கும் என்பதால் மக்கள் இன்றே கிடைக்கும் ரயில் அல்லது பஸ்ஸில் ஏறி ஊருக்குப் போய் தீபாவளியை கொண்டாட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது












Click it and Unblock the Notifications