இந்தியைத் திணிக்காதீங்க, "நீட்"டும் வேணாங்க.. கோவையில் மே 15-ல் திமுக ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி கோவையில் மே 15-ம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
கோவை: இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி கோவையில் மே 15-ம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
தேசிய தகுதிகாண் தேர்வு எனப்படும் நீட் தேர்வை அமல்படுத்தினால் தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவர். அவர்களின் மருத்துவர் கனவு கானல் நீராகிவிடும் என்று பல்வேறு கட்சியினரும் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதேபோல் இந்தி மொழியை கட்டாயமாக்கும் முயற்சியை பாஜக மேற்கொண்டு வருகிறது. இது தமிழை ஓரங்கட்டிவிட்டு கிட்டத்தட்ட இந்தி மொழியை திணிக்கும் செயல் என்பதால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திமுக மாணவர் அணிச் செயலாளர் இள.புகழேந்தி வெளியிட்ட அறிக்கையில், இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் மே 15-ம் தேதி கோவையில் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications