140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி.. சென்னைக்கு வழங்கும் குடிநீர் பாதியாகக் குறைப்பு.. மக்கள் கடும் அவதி
தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளதால் சென்னைக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகம் கடும் வறட்சியை சந்தித்து வருகிறது. இதனால் சென்னைக்கு வழங்கும் குடிநீரின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் முக்கியமானவை. அங்கிருந்துதான் சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஏரிகளில் இருந்து கிடைக்கும் நீரில் இருந்து ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர், சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

சென்னைக்கு பாதியாக குறைந்த குடிநீர்
இந்த நீரின் அளவு தற்போது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தரும் தகவலை சென்னை குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பூண்டி, புழல், சோழாவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரியும் காய்ந்து கிடப்பதால் சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

3 நாளைக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்
அதுமட்டுமல்லாமல் சென்னையின் பெரும்பாலான இடங்களில் 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர 300 லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்படுகிறது.

காய்ந்த வீராணம்
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் வருவதும் முற்றுலும் நின்றுவிட்டது. அதற்கான குழாய்கள் காய்ந்தே கிடக்கின்றன. இந்நிலையில், பல்வேறு இடங்களில் இருந்து நீரை உறிஞ்சி இந்தக் குழாய்களின் வழியே சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 90 மில்லியன் லிட்டர் அனுப்பப்பட்டு வருகிறது.

கல்குவாரி நீர்
இதுதவிர காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதியில் உள்ள கல் குவாரிகளில் இருந்து நீர் எடுக்கப்பட்டு அது சென்னை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் பெறப்படும் தண்ணீரும் சென்னைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

முறையாக பராமரித்தால்..
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை முறையாக பராமரித்தால் சென்னைக்கு தண்ணீர் பஞ்சமே வராது. ஆனால் அதனை அரசு செய்வதே இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications