எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் மக்கள் கூட்டமாக சென்னை வந்து ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு… முதல்வர் ஷாக்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் மக்களே அவருக்கு ஆதரவளிக்காமல் சென்னை வந்து ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவளித்துள்ளனர். இதனால் தமிழக முதல்வர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான எடப்பாடியை சேர்ந்த அதிமுக ஆதரவாளர்கள், ஊர்கார்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவளித்தனர்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் கடும் குழப்பமும், கூச்சலும், பிரிவுகளும் உருவாகியுள்ளது. சசிகலாவின் தலைமை ஏற்க மறுத்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனியாக அணி அமைத்து தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கிய மூத்த தலைவர்களான மசூதனன், பொன்னையன் ஆகியோர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளித்தனர். மேலும் 12 எம்பிக்கள், 12 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

சசிகலாவிற்கு எதிராக..
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் சசிகலாவிற்கு ஆதரவாக இருக்கும் எம்எல்ஏ மற்றும் எம்பிகளிடம் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஊர் ஊராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சசிகலலா ஆதரவாளர்களிடம் பேசி வருகின்றனர்.

ஜெ. மரண விசாரணை
மேலும், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், அதனால் சிபிஐ விசாரணையை நடத்த வேண்டும் என்று கோரியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்திக் காட்டினார்கள். அதே போன்று சசிகலா ஆதரவாளர்கள் அதிக உள்ள ஊர்களிலும் பெரும் கூட்டத்தை கூட்டி தங்கள் அணியின் பலத்தை ஓபிஎஸ் அணியினர் நிரூப்பித்து வருகின்றனர்.

எடப்பாடியில் இருந்து 300 பேர்…
இதை தொடர்ந்து, சென்னையில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியை சேர்ந்த அதிமுக ஆதரவாளர்கள், ஊர்கார்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் சென்றனர். அங்கு அவரை நேரில் சந்தித்து ஆதவளித்தனர்.

முதல்வர் ஷாக்
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக மற்ற மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து ஆதரவு பெருகி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் மக்களே அவரை கை கழுவி விட்டுவிட்டு ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவளித்திருப்பது எடிப்பாடியரை மிகவும் கவலையடையச் செய்துள்ளது.
-
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications