எண்ணி இரண்டே மாதம்.. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கவிழும்.. மதுசூதனன் ஆருடம்!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இன்னும் இரண்டு மாதத்தில் கவிழும் என ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இன்னும் இரண்டு மாதத்தில் கவிழும் என ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் தெரிவித்துள்ளார். அதன் பிறகு ஈபிஎஸ் அணியில் உள்ளவர்கள் எல்லாம் ஓபிஎஸ் பக்கம் வந்து விடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மக்கள் விரும்பினால் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையும் என் அவர் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் பக்கம்தான் மக்கள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இன்னும் 2 மாதத்தில் கவிழும் என்றும் மதுசூதனன் கூறினார். அதன் பின்னர் அந்த அணியினர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications