தருமபுரியில் 144 தடை உத்தரவு அமல்! தடையை மீறி திருமாவளவன் வருவதால் பதற்றம்!!

தருமபுரி நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன் மற்றும் செல்லன் கொட்டாயை சேர்ந்த திவ்யா ஆகியோர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் நத்தம் காலனியில் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த திருமண விவகாரத்தில் இளவரசன் திடீரென மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்து ஜூலை 4-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் ஊர்வலம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த போலீசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் தருமபுரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த தடை உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
தடையை மீறும் திருமாவளவன்
இத் தடையை தாண்டி இளவரசன் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்து இருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தருமபுரி மாவட்ட செயலாளர் ராமன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆட்சியர் விவேகானந்தனிடம் இதற்காக மனுவையும் கொடுத்துள்ளனர்.
இதனிடையே நத்தம் காலனியை சேர்ந்த சிலர் ஆயுத பயிற்சி பெற்றுள்ளதாகவும் அவர்கள் இளவரசன் நினைவு நாளின் போது செல்லன் கொட்டாய் உள்ளிட்ட ஊர்களை தாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து நத்தம் காலனி பகுதியில் வீடு வீடாக சோதனை நடத்தி போலீசார் 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், நாட்டு வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
பலத்த பாதுகாப்பு
இதனால் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தடுக்கும் வகையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 2 கம்பெனியை சேர்ந்த 240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாயக்கன் கொட்டாய், செல்லன் கொட்டாய், நத்தம் காலனியை சுற்றியுள்ள ரோடுகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.
தடையை மீறி யாரேனும் தருமபுரி மாவட்டத்துக்குள் நுழைய முயன்றால் அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தி கைது செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
இது திமுக பண்ணையார்தனம்.. திருமாவளவன் கண்ணீர் தான் விடவில்லை.. கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications