தருமபுரியில் 144 தடை உத்தரவு அமல்! தடையை மீறி திருமாவளவன் வருவதால் பதற்றம்!!

தருமபுரி நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன் மற்றும் செல்லன் கொட்டாயை சேர்ந்த திவ்யா ஆகியோர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் நத்தம் காலனியில் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த திருமண விவகாரத்தில் இளவரசன் திடீரென மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்து ஜூலை 4-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் ஊர்வலம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த போலீசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் தருமபுரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த தடை உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
தடையை மீறும் திருமாவளவன்
இத் தடையை தாண்டி இளவரசன் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்து இருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தருமபுரி மாவட்ட செயலாளர் ராமன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆட்சியர் விவேகானந்தனிடம் இதற்காக மனுவையும் கொடுத்துள்ளனர்.
இதனிடையே நத்தம் காலனியை சேர்ந்த சிலர் ஆயுத பயிற்சி பெற்றுள்ளதாகவும் அவர்கள் இளவரசன் நினைவு நாளின் போது செல்லன் கொட்டாய் உள்ளிட்ட ஊர்களை தாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து நத்தம் காலனி பகுதியில் வீடு வீடாக சோதனை நடத்தி போலீசார் 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், நாட்டு வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
பலத்த பாதுகாப்பு
இதனால் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தடுக்கும் வகையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 2 கம்பெனியை சேர்ந்த 240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாயக்கன் கொட்டாய், செல்லன் கொட்டாய், நத்தம் காலனியை சுற்றியுள்ள ரோடுகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.
தடையை மீறி யாரேனும் தருமபுரி மாவட்டத்துக்குள் நுழைய முயன்றால் அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தி கைது செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications