சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து சென்னையில் ஆலோசனை நடத்திய தேர்தல் அதிகாரிகள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தமிழக அரசின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து ஏப்ரல் அல்லது மே மாத துவக்கத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் துவங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களை அளித்து வருவதுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இதுவரை 24 மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் நாளை திருச்சியில் 8 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.
அண்மையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 40 சதவீதம் பேர் போலி வாக்காளர்கள் என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது. மேலும் திமுக எம்.பி. கனிமொழி கடந்த திங்கட்கிழமை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சந்தித்து இது குறித்து புகார் மனு அளித்தார்.
ஜைதி மற்றும் தேர்தல் அதிகாரிகள் அடங்கிய குழு வரும் 10ம் தேதி சென்னை வருகிறது. அந்த குழு 10,11 ஆகிய தேதிகளில் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், அரசு மற்றும் போலீ்ஸ் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்த உள்ளது.
முன்னதாக துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தலைமையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் 4 பேர் சென்னை வந்து புதன்கிழமை லக்கானி மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினர். சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications