சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து சென்னையில் ஆலோசனை நடத்திய தேர்தல் அதிகாரிகள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தமிழக அரசின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து ஏப்ரல் அல்லது மே மாத துவக்கத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் துவங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களை அளித்து வருவதுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இதுவரை 24 மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் நாளை திருச்சியில் 8 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.
அண்மையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 40 சதவீதம் பேர் போலி வாக்காளர்கள் என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது. மேலும் திமுக எம்.பி. கனிமொழி கடந்த திங்கட்கிழமை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சந்தித்து இது குறித்து புகார் மனு அளித்தார்.
ஜைதி மற்றும் தேர்தல் அதிகாரிகள் அடங்கிய குழு வரும் 10ம் தேதி சென்னை வருகிறது. அந்த குழு 10,11 ஆகிய தேதிகளில் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், அரசு மற்றும் போலீ்ஸ் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்த உள்ளது.
முன்னதாக துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தலைமையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் 4 பேர் சென்னை வந்து புதன்கிழமை லக்கானி மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினர். சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
-
வீதியில் இறங்கிய மம்தா.. முதல் நாளே அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்.. என்ன நடக்கிறது? -
50,000 மேல் பணம் இருந்தால் பறிமுதல்.. அவசர தேவைக்கு என்ன செய்ய வேண்டும்? தேர்தல் அதிகாரி விளக்கம் -
சிபிஐ தொடங்கி ED வரை.. எல்லாருக்கும் பறந்த லெட்டர்.. தமிழக தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி -
இந்தி திணிப்பு போராட்டத்தில் வீரமரணம்.. ரயில் மோதி சிகிச்சையில் இருந்த மே17 சிவா திலீபன் உயிரிழப்பு -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே இருக்கு.. அர்ச்சனா பட்நாயக் சொன்ன அப்டேட்! -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
Heavy Rain: இன்னைக்கு நைட் புல்லா மழை வெளுக்க போகுது.. கோவை டூ குமரி வரை 22 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே!











Click it and Unblock the Notifications