தேர்தல் ஆணையத்தில் லாரி லாரியாக தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை திரும்பப்பெறுகிறது ஈபிஎஸ் அணி?
சசிகலாவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்களை திரும்பப்பெற செய்ய ஈபிஎஸ் அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சென்னை: சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்களை திரும்பப்பெற ஈபிஎஸ் அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் அதிகார மோதல் வெடித்தப் பிறகு தனி அணியாக செயல்பட்டு வரும் ஒபிஎஸ் அணியினர் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என போர்க்கொடி துக்கினர்.
இதனை எதிர்த்து டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே கட்சியை வழி நடத்த உரிமை உள்ளது என பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.

லாரி லாரியாக பிரமாண பத்திரங்கள்
அப்போது சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த எடப்பாடி அணியினர் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதும் டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதும் செல்லும் என ஓபிஎஸ் அணிக்கு எதிராக லாரி லாரியாக பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.

எதிராக திரும்பிய எடப்பாடி
ஈபிஎஸ் அணி தாக்கல் செய்ததில் பல போலி பிரமாண பத்திரங்கள் இருப்பதாக ஓபிஎஸ் அணி குற்றம் சாட்டியது. இந்நிலையில் ஈபிஎஸ் அணியினர் சசிகலா குடும்பத்திற்கு எதிராக திரும்பியுள்ளனர்.

சசிகலாவை நீக்கம்?
இன்று ஒரு முடிவோடு அதிமுக தலைமை கழகத்துக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தினகரனுக்கு கட்சியில் எந்த அதிகாரமும் இல்லை என தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இதேபாணியில் சசிகலாவையும் கட்சியில் இருந்து நீக்க ஈபிஎஸ் அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரமாண பத்திரங்கள் வாபஸ்?
மேலும் சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை திரும்பப்பெறவும் ஈபிஎஸ் அணி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என கூறப்படுவதால் ஈபிஎஸ் அணி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications