ஒரே டிரஸ்ஸில் இருந்த ஒபாமா.. அடிக்கடி டிரஸ் மாற்றிய மோடி.. ஈவிகேஎஸ் இளங்கோவன் விளாசல்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில் செவ்வாக்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூறுநாள் தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தை பாரதீய ஜனதா அரசு ரத்து செய்ய முயற்சிப்பதை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், ஏழை-எளிய மக்களின் வயிற்றில் அடிப்பதை மோடி அரசு செய்து வருகிறது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை ரத்து செய்யும் முயற்சியில் இந்த அரசு ஈடுபடுகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிராமங்களில் ஏழை-எளிய பெண்கள், ஆதரவற்றவர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதிக பயன் அடைந்து வந்தனர்.

ஐ.நா.சபையே இந்த திட்டத்தை புகழ்ந்து உள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் இதுபோன்ற திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை ஒழிக்க மோடி அரசு எல்லா வழியிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் 350 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டம் தற்போது 64 வட்டாரமாக குறைக்கப்பட்டு உள்ளது. சாதாரண ஏழை-எளிய மக்கள் பற்றி மோடிக்கு அக்கறை அல்லை. அவர் மன்னர் பரம்பரை போன்று செயல்படுகிறார்.
110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 60 கோடி மக்களின் நிலையை உணராமல் உள்ளார். அதனால்தான் குடியரசு தின விழாவில் கூட ஆடம்பரத்தை பின்பற்றி உள்ளார்.
உலக பணக்கார நாட்டின் அதிபரான ஒபாமா காலையில் இருந்து மாலை வரை ஒரே உடை அணிந்து இருந்தார். ஆனால் மோடி அரை மணி நேரத்துக்கு ஒரு ஆடை அணிந்தார். நான் அவர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் சொல்லவில்லை. ஏழை மக்களின் நிலையை அறியாதவர் என்ற அடிப்படையில் கூறுகிறேன். எனவே அவர் மக்கள் குறைகளை போக்குவதில் கவனம் செலுத்தவில்லை. மோடி அரசை விரைவில் தூக்கி எறிய வேண்டும் என்றார் இளங்கோவன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications