டெல்டா மாவட்டத்தில் தொடரும் சோகம்.. பயிர்கள் கருகியதால் விவசாயி மரணம்
மழை பொய்த்துப் போய் பயிர்கள் கருகியதைக் கண்டு நாகை மாவட்ட விவசாயி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
நாகப்பட்டினம்: காவிரியில் தண்ணீர் கிடைக்காமலும் மழை பொழியாமலும் பயிர்கள் கருகி வருவதைக் கண்டு மனம் உடைந்திருந்த விவசாயி, பயிருக்கான காப்பீட்டு தொகையையும் கட்ட முடியாமல் போனதால் மன நெருக்கடி அதிகமாகி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகுமாரன். விவசாயியான இவர் 8 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்திருந்தார். ஆனால், போதிய மழையில்லாமல் பயிர்கள் வாடத் தொடங்கின. காவிரியில் இருந்தும் தண்ணீர் வராததால் பயிர் கருகி போயிற்று.

இந்நிலையில், பயிர் காப்பீட்டு தொகையை கட்ட இந்த மாதம் 30ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், காப்பீட்டுத் தொகையை கட்ட வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பை வேளாண்துறை அதிகாரிகள் கீழையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆட்டோக்களில் சென்று ஒலிப்பெருக்கி மூலம் விளம்பரம் செய்து வந்தனர். இந்தப் பணத்தை எப்படிக் கட்டுவது என்று தெரியாமல் விழித்த ராஜகுமாரன் மன உலைச்சலுக்கு ஆளானார்.
இதனையடுத்து, காப்பீட்டைத் கட்டுவதற்கான தொகையை அவருடைய உறவினர்களிடம் ராஜகுமாரன் கேட்டுள்ளார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை அடுத்து மக்களிடம் பணப் புழக்கம் இல்லாததால் யாராலும் ராஜகுமாரனுக்கு உதவ முடியவில்லை. இதனால் மேலும், மன உலைச்சலுக்கு ஆளான விவசாயி ராஜகுமாரன் வெறும் கையோடு வீடு திரும்பியுள்ளார். வீட்டில் இருந்தவர்களிடம் நெஞ்சுவலிக்கிறது என்று சொல்லிவிட்டு படுக்கையில் படுத்திருக்கிறார். படுத்தவர் மீண்டும் எழவில்லை. நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காத ராஜகுமாரன் மாரடைப்பால் மரணமடைந்தது தெரிய வந்தது.
கடும் மன அழுத்தத்தின் காரணமாகவே மாரடைப்பு ஏற்பட்டு விவசாயி மரணம் அடைந்தது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜகுமாரின் மரணத்தை அடுத்து, தமிழகத்தில் பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயிகளின் மரண எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications