டெல்டா மாவட்டத்தில் தொடரும் சோகம்.. பயிர்கள் கருகியதால் விவசாயி மரணம்
மழை பொய்த்துப் போய் பயிர்கள் கருகியதைக் கண்டு நாகை மாவட்ட விவசாயி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
நாகப்பட்டினம்: காவிரியில் தண்ணீர் கிடைக்காமலும் மழை பொழியாமலும் பயிர்கள் கருகி வருவதைக் கண்டு மனம் உடைந்திருந்த விவசாயி, பயிருக்கான காப்பீட்டு தொகையையும் கட்ட முடியாமல் போனதால் மன நெருக்கடி அதிகமாகி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகுமாரன். விவசாயியான இவர் 8 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்திருந்தார். ஆனால், போதிய மழையில்லாமல் பயிர்கள் வாடத் தொடங்கின. காவிரியில் இருந்தும் தண்ணீர் வராததால் பயிர் கருகி போயிற்று.

இந்நிலையில், பயிர் காப்பீட்டு தொகையை கட்ட இந்த மாதம் 30ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், காப்பீட்டுத் தொகையை கட்ட வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பை வேளாண்துறை அதிகாரிகள் கீழையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆட்டோக்களில் சென்று ஒலிப்பெருக்கி மூலம் விளம்பரம் செய்து வந்தனர். இந்தப் பணத்தை எப்படிக் கட்டுவது என்று தெரியாமல் விழித்த ராஜகுமாரன் மன உலைச்சலுக்கு ஆளானார்.
இதனையடுத்து, காப்பீட்டைத் கட்டுவதற்கான தொகையை அவருடைய உறவினர்களிடம் ராஜகுமாரன் கேட்டுள்ளார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை அடுத்து மக்களிடம் பணப் புழக்கம் இல்லாததால் யாராலும் ராஜகுமாரனுக்கு உதவ முடியவில்லை. இதனால் மேலும், மன உலைச்சலுக்கு ஆளான விவசாயி ராஜகுமாரன் வெறும் கையோடு வீடு திரும்பியுள்ளார். வீட்டில் இருந்தவர்களிடம் நெஞ்சுவலிக்கிறது என்று சொல்லிவிட்டு படுக்கையில் படுத்திருக்கிறார். படுத்தவர் மீண்டும் எழவில்லை. நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காத ராஜகுமாரன் மாரடைப்பால் மரணமடைந்தது தெரிய வந்தது.
கடும் மன அழுத்தத்தின் காரணமாகவே மாரடைப்பு ஏற்பட்டு விவசாயி மரணம் அடைந்தது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜகுமாரின் மரணத்தை அடுத்து, தமிழகத்தில் பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயிகளின் மரண எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications