ஜெ. நினைவிடத்தில் பட்ஜெட் உரையை வைத்து அஞ்சலி செலுத்தினார் அமைச்சர் ஜெயகுமார்
ஜெயலலிதா நினைவிடத்தில் நிதியமைச்சர் ஜெயகுமார் நிதிநிலை அறிக்கையை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதையொட்டி ஜெயலலிதா நினைவிடத்தில் நிதியமைச்சர் ஜெயகுமார் நிதிநிலை அறிக்கையை வைத்து அஞ்சலி செலுத்தினார். சாமானிய மற்றும் ஏழை மக்களின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இன்று முதல் முறையாக தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வது அமைச்சர் ஜெயகுமாருக்கும் இதுவே முதல் முறையாகும்.

இதைத்தொடர்ந்து சட்டசபைக்கும் செல்லும் முன் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்ற அமைச்சர் ஜெயகுமார் அங்கு பட்ஜெட் உரையை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நிதிநிலை அறிக்கையை ஜெ நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றதாக கூறினார்.
தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்க முன்னோடி திட்டங்களை கொண்டுவந்தவர் ஜெயலலிதா என அமைச்சர் ஜெயகுமார் கூறினார். மக்களுக்கான வளர்ச்சித்திட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
ஜெயலலிதா வழியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் சாமானிய மற்றும் ஏழை மக்களின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றார். ஜெயலலிதாவின் பொன்மொழியின்படி எவ்வளவு நிதிப்பற்றாக்குறை இருந்தாலும் ஏழை எளிய மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications