சென்னை ஏசி குடோனில் பயங்கர தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் ஏசி குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
சென்னை: சென்னை வானகரத்தில் உள்ள தனியார் ஏசி குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீ அணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். மேலும் மளமளவென பரவிய தீயால் தொழிற்சாலை முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இதனையடுத்து அருகேயுள்ள இரண்டு நிறுவனங்களுக்கும் தீ பரவியது.
தகவல் அறிந்த தீ அணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேரத்திற்கு பிறகு போராடி தீயை அணைத்தனர். தீயை அணைக்கும் பணியில் 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. தீ விபத்து குறித்து வானகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்து மின்கசிவால் ஏற்படதா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காணப்பட்டது. இதனால் அருகில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் இது குறித்து கோட்ட தீயணைப்பு அதிகாரி ராஜேஷ் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஏசி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீயணைப்பு தடுப்பு கருவிகள் எதுவும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
-
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications