செம்மரக் கடத்தல்: திருப்பதி, கடப்பாவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு- 40 பேர் தப்பியதாக தகவல்
ஆந்திராவில் செம்மரக் கடத்தல்காரர்கள் மீது அம்மாநில போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அமராவதி: செம்மரக் கடத்தல்காரர்களை விரட்ட திருப்பதி மற்றும் கடப்பாவில் ஆந்திரா போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீசாரின் துப்பாகிச் சூட்டைத் தொடர்ந்து செம்மரக் கடத்தல்காரர்கள் 40 பேர் தப்பியதாக கூறப்படுகிறது.
ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் எனக் கூறி அப்பாவி தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. உச்சகட்டமாக 20 தமிழர்களை காக்கை குருவிகளைப் போல ஆந்திரா போலீஸ் சுட்டுக் கொன்றது.

இதன்பின்னரும் தமிழக தொழிலாளர்களை மட்டுமே ஆந்திரா போலீஸ் குறிவைத்து தாக்குகிறது. ஆனால் இந்த செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவர்கள் யாரும் இதுவரை சிக்கவில்லை.
இந்நிலையில் இன்று திருப்பதி, கடப்பா வனப்பகுதிகளில் திடீரென ஆந்திரா போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். செம்மரக் கடத்தல்காரர்கள் தங்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்கிறது ஆந்திரா போலீஸ்.
இந்நடவடிக்கையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் 40 பேர் தப்பி ஓடிவிட்டதாக ஆந்திரா போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications