கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் நால்வர் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. ஏற்கனவே கைது செய்த தமிழக மீனவர்கள் 77 பேரை சமீபத்தில்தான் நல்லெண்ண அடிப்படை என்ற பெயரில் விடுதலை செய்திருந்தது இலங்கை. ஆனால் அதற்குள்ளாக கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 4 தமிழக மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் விசை படகுகளையும் கைப்பற்றி அட்டகாசம் செய்துள்ளது இலங்கை கடற்படை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications