லஞ்சம் கொடுத்த தினகரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த டிடிவி.தினகரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த டிடிவி.தினகரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கே பணம் கொடுத்தவர் தான் டிடிவி தினகரன் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இரட்டை இலைச்சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு டிடிவி.தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்ற நிகழ்வு தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லஞ்சம் கொடுத்த தினகரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கே பணம் கொடுத்தவர் தான் டி.டி.வி. தினகரன் என்றும் அவர் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications