மீண்டும் தேர்தல் களத்தில் 'திண்டுக்கல்' காந்திராஜன்.. ரீ என்ட்ரி கனவு நிறைவேறுமா?
திண்டுக்கல்: லோக்சபா தேர்தலுக்கான திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் என்ற அறிவிப்பின் மூலம் சட்டசபை முன்னாள் துணை சபாநாயகர் எஸ். காந்திராஜன் மீண்டும் அரசியல் களத்தில் குதித்துள்ளார். இந்த ரீ என்ட்ரியை தக்க வைத்து அவர் வெல்வாரா? என்பதுதான் இப்பகுதி வாக்காளர்களிடையேயான ஹைலைட் விவாதம்.
திண்டுக்கல் அதிமுகவில் 1980களில் கோலோச்சியவர் வி.பி. பாலசுப்பிரமணியன். இவர் 1980,84களில் வேடசந்தூர் சட்டசபை எம்.எல்.ஏ.வாக இருந்ததுடன் தமிழக சட்டசபை துணை சபாநாயகராகவும் பணியாற்றினார். இவரது காலத்திலேயே அதிமுகவில் பிரவேசம் செய்தவர் காந்திராஜன்.

எம்.ஜி.ஆர். காலத்தில் வி.பி. பாலசுப்பிரமணியன் என்றால் ஜெயலலிதா காலத்தில் எஸ். காந்திராஜன் என்ற நிலையை உருவாக்கிக் கொண்டார். வேடசந்தூர் அருகே மாத்தினிபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார்.
வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ, சட்டசபை துணை சபாநாயகர், குடிநீர் வடிகால் வாரியத் தலைவர் என பொறுப்புகளையும் வகித்தார் காந்திராஜன். பின்னர் அதிமுகவில் ஓரம்கட்டப்பட்டார் காந்திராஜன்.
இதனால் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவினார் காந்திராஜன். திமுகவில் இவரும் ஒரு சீனியர் என்ற அடிப்படையில்தான் இருந்தாரே தவிர மாவட்ட செயலர் ஐ.பெரியசாமியைத் தாண்டி இவர் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு செலுத்த முடிந்ததில்லை.
திமுக கூட்டணியில் வேடசந்தூர் தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் போதெல்லாம் அது காங்கிரஸுக்கு ஒதுக்கிவிடப்பட்டு ஏமாற்றத்துடனேயே இருந்தார் காந்திராஜன். அதே நேரத்தில் காந்திராஜனும் அவரது சகோதரர் நடராஜனும் திண்டுக்கல் மாவட்டத்தில் கணிசமாக இருக்கும் ஒக்கலிகர் ஜாதி சங்கத்தின் பணிகளில் முன்னிலைப்படுத்திக் கொண்டனர்.
லோக்சபா தேர்தலில் மாவட்ட செயலர் ஐ.பெரியசாமி மகனுக்கு சீட்கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காந்திராஜனுக்கு சீட் கிடைத்திருக்கிறது. நீண்டகாலம் அரசியலில் ஒதுக்கப்பட்டவராக இருந்த காந்திராஜன் தற்போது மீண்டும் அரசியல் களத்துக்கு வந்துள்ளார்.
திமுகவுக்கு வந்து பல ஆண்டுகாலம் ஆகிவிட்ட போதும் அதிமுகவில் இன்னமும் தமக்கு ஒரு ஆதரவு வட்டத்தையும் காந்திராஜன் தக்க வைத்துக்கொண்டுதான் இருக்கிறார். இது இந்த தேர்தலில் தமக்கு ப்ளஸ் என்பது காந்திராஜனின் கணக்கு.
தமக்கு மீண்டும் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை எப்படியும் பயன்படுத்தி வென்றாக வேண்டிய நிலையில் எஸ். காந்திராஜன் தேர்தல் களத்தை எதிர்கொள்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications