"மழை வருது.. மழை வருது... குடை கொண்டு வா".. இது அரசு பேருந்து ஓட்டுநர்களின் கவலை!
சென்னை: ஆளாளுக்கு ஒரு பீலிங் என்பது போல், மழைக்காலம் வருகிறது என்றால் ஆளாளுக்கு ஒரு கவலை காளான் போல முளைத்து விடுகிறது.
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை கற்றுத் தந்த பாடத்திலிருந்து இம்முறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் மக்கள். இம்மாதம் 20ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால், மழையை எதிர்கொள்ள மக்களும் முன்னேற்பாடுகளுடன் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், மழையால் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு வித்தியாசமான சவால் காத்திருக்கிறது.

சாகசப் பேருந்துகள்...
அதாவது அரசு பேருந்துகளில் பெரும்பாலானவை ஓட்டை ஒடிசல்களுடன் பரிதாபகரமான நிலையில் உள்ளன என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். ஓடும் பேருந்தில் படிக்கட்டுகள் கழன்று விழுந்தது, சக்கரம் உருண்டு ஓடியது போன்ற செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணமே உள்ளன.

மேற்கூரைகளில் ஓட்டை...
இவை ஒருபுறம் இருக்க, பல பேருந்துகளில் பயணிகள் சுகமாக காற்று வாங்கியபடி செல்ல, ஜன்னல்கள் தவிர்த்து மேற்கூரையிலும் பல துளைகள் உள்ளன. இவற்றைச் சரி செய்யாமலேயே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பேருந்துக்குள் குடை...
இதனால் மழை காலங்களில் பேருந்துக்குள்ளும் குடைகள் தேவைப் படுகின்றன. பயணிகள் கைகளில் குடைகளுடன் அமர்ந்திருந்தால் கூட ஓகே, ஆனால் டிரைவருக்கும் குடை தேவைப்பட்டால்.

மீம்ஸ்...
இவற்றைப் பற்றி சமூகவலைதளங்களில் விதவிதமான மீம்ஸ்களும் உலா வருகின்றன. ஆனால், அதனை அரசோ, போக்குவரத்து கழகமோ கண்டுகொள்வதே இல்லை.

தலைக்கு மேலே அட்டை...
அப்படித்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு அரசுப் பேருந்து டிரைவர் தனது இருக்கைக்கு மேலே ஒழுகியதால், ஒரு அட்டையை தலைக்கு மேலே வைத்து கையில் பிடித்தபடி பேருந்தை இயக்கிச் சென்றுள்ளார்.

டிரைவர்களின் கவலை...
சின்ன மழைக்கே இந்தக் கதி என்றால், கனமழை பெய்யும் சமயங்களில் ஏற்கனவே சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடும். இதில், தலைக்கு மேல் கொட்டும் மழை நீரையும் எப்படி சமாளித்துக் கொண்டு வண்டி ஓட்டுவது என்ற கவலை டிரைவர்கள் மத்தியில் உள்ளது.

கோரிக்கை...
எனவே, கனமழைக்கு முன்னதாகவே பேருந்துகளின் மேற்கூரைகளில் உள்ள ஓட்டைகளைச் சரி செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை ஆகும்.

வழக்கு...
கடந்த 2011-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் புதுக்கோட் டையில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில் பயணித்தபோது பேருந்தில் பேருந்தில் மழை நீர் ஒழுகியதால் பாதிக்கப்பட்டதாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ரூ.3 ஆயிரம் நஷ்டஈடும், வழக்கு செலவுக்காக ரூ.2 ஆயிரமும் போக்கு வரத்துக் கழக நிர்வாகம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications