பழைய நோட்டு எவ்வளவுதான் இருக்கு.. சரியா கணக்கு சொல்லுங்க- ரிசர்வ் வங்கியிடம் வங்கி அதிகாரிகள் கேள்வி
500 ரூபாய் நோட்டு பற்றிய தகவல்களை தவறாக ரிசர்வ் வங்கி வழங்கி வருகிறது என்ற வங்கி அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை: செல்லாத ரூபாய் நோட்டுக்கள் மொத்தம் எவ்வளவு உள்ளது என்பது குறித்த உண்மையான தகவல்களை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கோரியுள்ளது.
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுத்துறை வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் புதிய நோட்டுக்களை ரிசர்வ் வங்கி, பொதுத்துறை நிறுவனங்களுக்கு கொடுக்காமல் தனியார் வங்கிகளுக்கு கொடுத்து வருவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 500 ரூபாய் நோட்டுக்கள் பற்றிய உண்மையான தகவல்களை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களின் மொத்த மதிப்பு ரூ. 14.6 லட்சம் கோடி என ரிசர்வ் வங்கி தொடக்கத்தில் கூறியது. இந்தப் பணத்தில் 60 சதவீதம் வங்கிகளிலேயே உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி 8 லட்சம் கோடி மதிப்புக்கு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு சென்று சேர்ந்துள்ளதாக தகவல் வெளியானது.
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று 8ம் தேதி அறிவித்த போது 60 சதவீத பணம் வங்கிகளில் இருப்பதாக கணக்கில் வைத்துக் கொண்டால், அதற்கு, பின்னர் மக்களிடம் இருந்த பழைய நோட்டுக்கள் 40 சதவீதம்தான் சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லாமல், புதிதாக வெளியான தகவலின் படி பார்த்தால், 60 சதவீதம் மக்களிடம் இருந்து பணம் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துள்ளது. ஆக, 120 சதவீதம் பணம் தற்போது வங்கிகளில் இருப்பதாக ஆகிறது. அப்படி என்றால் வங்கிகளில் கள்ள நோட்டுக்கள் வாங்கி வைக்கப்படுகிறதா என்றும் வங்கி அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications