சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம்: சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்
மதுரை: சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உறுதியளித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 18நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தது.

இதற்கு முதல் கட்டமாக 9 நீதிபதிகளை தலைமை நீதிபதி கவுல் பரிந்துரைத்திருந்தார். ஆனால் இந்த பட்டியலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகமாக இருப்பதாகவும் அனைத்து சமூகத்தினருக்கும் பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தலைமை நீதிபதி செயல்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தியிருந்தனர்.
இதற்காக போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் மதுரையில் தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
நீதிபதிகள் நியமனம் முழுமையாக முடிவடையும் போது எந்த ஒரு சமூகத்தினரும் புகார் கூறமாட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஆண்கள் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்கள் என பார்ப்பது இல்லை... அதனால் எத்தனை பெண்கள் நீதிபதியானார்கள் எனவும் பார்ப்பதில்லை..
பெண் என்பதற்காகவே எவர் ஒருவருக்கும் நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது இல்லை.. அவர்களை நான் வழக்கறிஞராகத்தான் பார்க்கிறேன்.. இதுதான் என்னுடைய அணுகுமுறை என்றார்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications