இரோம் ஷர்மிளா திருமணத்திற்கான தடை நீங்கியது.. தேமுதிக எதிர்ப்பு நிராகரிப்பு.. விரைவில் டும்டும்!
திண்டுக்கல்: மணிப்பூரில் இரும்புப் பெண்மணியாக பல ஆண்டுகள் போராடிய இரோம் சர்மிளா மிக விரைவில் திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கிறார். கொடைக்கானல் சார்பதிவாளரிடம் திருமண பதிவுக்காக விண்ணப்பம் செய்துள்ளார் இரோம் சர்மிளா.
மணிப்பூரில் ராணுவ சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் இரோம் ஷர்மிளா. அவரின் உண்ணாவிரதப் போராட்டம் 17 ஆண்டுகளாக நடந்தது.
உலகில் வேறு யாரும் அகிம்சை போராட்டத்தை இவ்வளவு ஆண்டுகளாக நடத்தியிருப்பார்களா என்பது கேள்விக்குறியே. இந்நிலையில், தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு தேர்தல் அரசியலில் குதித்தார் இரோம்.
சிலமாதங்களுக்கு முன்பு மணிப்பூரில் நடந்த தேர்தலில் இரோம் போட்டியிட்டார். அதில் மிக மிக சொற்பமான வாக்குகளை பெற்று தோல்வியை அவர் தழுவினார். தனது இளமை காலத்தை போராட்ட வாழ்வுக்கு அர்ப்பணித்த இரோமுக்கு மணிப்பூர் மக்கள் கொடுத்த பரிசு சொற்ப வாக்குகள்தான். இதனை உணர்ந்த அவர் அந்த மாநிலத்தை விட்டே வெளியேறினார்.

கொடைக்கானல் வாழ்க்கை
தேர்தல் தோல்வியால் விரக்தி அடைந்த இரோம், தமிழகத்தின் கொடைக்கானல் மலைக்கு வந்து தங்கினார். அவருடன் அவரின் நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவும் கொடைக்கானல் வந்து சேர்ந்தார்.

திருமணம் செய்ய முடிவு
போராட்ட வாழ்க்கையை விடுத்து, திருமண வாழ்க்கையை வாழ முடிவெடுத்துள்ளார் இரோம். இது குறித்து இரோம் சர்மிளா கூறுகையில், எனக்கு தேவையான அமைதி கொடைக்கானலில் கிடைத்துள்ளது. எனது போராட்ட வாழ்வு வேறு வடிவத்தில் தொடரும்.

இறுதி வரை கொடைக்கானல்தான்
தேஷ்மந்த் கோட்டின்கோ கொடைக்கானலில் தங்கியிருந்து ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். திருமணத்துக்குப் பின் அவருடன் கொடைக்கானலிலேயே தங்கிவிடுவேன்.

16 வருடப் போராட்டம் தோல்வி
மணிப்பூரில் 16 வருடங்களாக போராடி வந்த நான் தோல்வியைத் தழுவி இருந்தாலும் சோர்ந்து போகவில்லை. புதிய வகையில் நான் போராட தயாராகி உள்ளேன்.

இப்போதும் மணிப்போரில் பாலியல் கொடுமை
மணிப்பூரில் தற்போதும் ராணுவத்தினர் கற்பழிப்பு மற்றும் கொலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து புதிய வழியில் போராட உள்ளேன்.

சட்டப்படி திருமணம்
30 நாட்களும் எந்த எதிர்ப்பும் இல்லாத நிலையில், எங்களின் திருமணம் நிகழும். இந்திய தனி திருமணச் சட்டத்தின்படி கொடைக்கானலிலேயே திருமணம் நிகழ்வு நடக்கும் " என்று தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications