வானிலை ஆய்வுக்காக..விண்ணில் பாய்கிறது ஸ்காட்சாட்-1 செயற்கைக்கோள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து செப்டம்பர் 26-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.12 மணிக்கு பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட் ஏவப்படுகிறது. அதில் பருவநிலை தொடர்பான ஆய்வுக்காக 371 கிலோ எடை கொண்ட 'ஸ்காட்சாட்-1' என்ற செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவல்களை இந்த செயற்கைக்கோள் மூலம் பெற இயலும். இந்த செயற்கைக் கோள் பூமியில் இருந்து 720 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.இதற்கான கவுண்டவுன் இன்று காலை 8 மணி 42 நிமிடங்களுக்கு தொடங்கியுள்ளது.
இந்திய ராக்கெட் ஒன்று இரு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்களை செலுத்துவது இதுவே முதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications