விஜயபாஸ்கரை சிக்க வைத்த கல்குவாரி ஆவணங்கள்.. வருமான வரித்துறை மீண்டும் சம்மன்
அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அமைச்சர் ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: கல்குவாரியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
எம்எல்ஏக்கள் விடுதியில் நடைபெற்ற சோதனையில் ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா நடைபெற்றதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அதே நாளில் புதுக்கோட்டையில் உள்ள அமைச்சரின் வீடு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. துணை ராணுவப்படை பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதை தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் அழைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விஜயபாஸ்கரின் மனைவியிடமும் விசாரணை நடைபெற்றது.

கல்குவாரி முறைகேடு
கல்குவாரி முறைகேடு குறித்து விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணை மேற்கொண்டனர்.

பலமணி நேர விசாரணை
அவரிடம் பல்வேறு கேள்விகளை வருமான வரித்துறையினர் பல மணிநேரம் கேட்டதாக கூறப்படுகிறது. சின்னதம்பியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை முழுமையாக நிறைவடைந்தவுடன், இதுதொடர்பான மேல் விசாரணை அமலாக்கத்துறையினர் வசம் ஒப்படைக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜயபாஸ்கருக்கு சம்மன்
இந்தநிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரை மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் இன்று ஜூலை 21ஆம் தேதி நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பாவை தொடர்ந்து மகன்
ஏற்கெனவே குவாரியில் நடைபெற்ற சோதனை தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தையிடம், கடந்த 14ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. இதுகுறித்து இன்று அமைச்சரிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
முதல்வரின் நண்பர் தியாகராஜன் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நிலையில் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications