மதுவால் ஏற்படும் உயிரிழப்புக்கு ஜெயலலிதா தான் பொறுப்பு... வைகோ சுளீர்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஜெயலலிதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று விளாத்திகுளம் தொகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் வைகோ ஆவேசமாக பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி தமாகா வேட்பாளர் கதிர்வேலை ஆதரித்து மதிமுக பொது செயலாளர் வைகோ புதூரி்ல் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, நான் பல ஆண்டுகளாக மதுவை எதிர்த்து போராடி வருகிறேன். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சசிபெருமாள் உயிரிழந்தார். மதுபான கடையை அகற்றுதற்காக உண்ணாவிரதம் இருந்த எனது தாய் உயிரிழந்தார்.

 jayalalitha was responsible for the death caused by alcohol -vaiko

தமிழத்தில் மதுவினால் ஏற்படும் உயிரிழப்புக்களுக்கு ஜெயலலிதான் பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழகத்தில் விவசாயிகள் கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து வரகின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அரசியல் கட்சியினர் பல இடங்களில் பேசுவதால் மட்டும் மாற்றம் ஏற்படாது.

தமிழகத்தில் புதிதாக ஓட்டு போட உள்ள ஒன்றரை கோடி வாக்காளர்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் அவர் கூறுகையில் மது குடித்து விட்டு யாரும் என் கூட்டத்திற்கு வர கூடாது. இது என் கட்சிகாரர்களுக்கு மட்டுமல்ல. கூட்டணி கட்சிகளுக்கும் பொருத்தும் என ஒரே போடாக பேட்டார்.

இதனிடையே விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே வைகோ பிரசாரம் மேற்கொண்டபோது, அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் முடிந்து பாடல்கள் போடப்பட்டன. அது முடியும் வரை காத்திருந்தார் வைகோ.

ஆனால் பாடல்கள் தொடர்ந்து போடப்பட்டதால் இடையூறாக இருப்பதாகவும் இது திமுகவின் சதி எனவும் குற்றம்சாட்டினார். மேலும் வேறு ஒரு நாளில் பிரச்சாரம் செய்வதாக கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் வைகோவின் பேச்சை கேட்க காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+