காத்திருந்த 290 புதிய பேருந்துகள்… 'ரைட்' சொல்லி ஓட வைத்த ஜெ
சென்னை: கடந்த 6 மாதத்திற்கும் மேலாக பணிமனைகளில் காத்திருந்த புதிய பேருந்துகளுக்கு இன்றுதான் விமோசனம் கிடைத்துள்ளது. 290 புதிய பேருந்துகள் மற்றும் 55 சிற்றுந்துகளை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
55 சிற்றுந்துகளும் ஜெயலலிதாவால் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டன. மொத்தம் 87 கோடியே 24 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பேருந்துகள் மற்றும் கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் கோட்டம் சார்பில் திருச்சி மாவட்டம் - உப்பிலியாபுரத்தில் 99 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்துக் கழகப் பணிமனை, ஈரோடு மாவட்டம் - கோபிசெட்டிபாளையத்தில் 1 கோடியே 82 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகக் கட்டிடம் மற்றும் ஓட்டுநர் தேர்வுத்தளம்.
திருநெல்வேலி மாவட்டம் - அம்பாசமுத்திரத்தில் 81 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மோட்டார் வாகன பகுதி அலுவலகக் கட்டிடம் உள்பட, 19 கோடியே 53 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்துத் துறை கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

போக்குவரத்துத்துறை கட்டிடங்கள்
திருநெல்வேலி மாவட்டம் - திருநெல்வேலி மற்றும் சேரன்மகாதேவி, திண்டுக்கல் மாவட்டம் - திண்டுக்கல், சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி மற்றும் திருப்புவனம், திருவண்ணாமலை மாவட்டம் - சேத்துப்பட்டு, சேலம் மாவட்டம் - ஓமலூர், கோயம்புத்தூர் மாவட்டம் - ஒண்டிப்புதூர் (கூடுதல் பணிமனை), புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வக்கோட்டை.

ஆக மொத்தம் ரூ. 19.53 கோடி
தஞ்சாவூர் மாவட்டம் - திருவையாறு, கரூமொர் மாவட்டம் - குளித்தலை, தேனி மாவட்டம் - குமுளி (லோயர் கேம்ப்), மதுரை மாவட்டம் - செக்கானூரணி ஆகிய இடங்களில் 12 கோடியே 17 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 பணிமனைகள்; என மொத்தம் 19 கோடியே 53 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்துத் துறை கட்டிடங்களையும் முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

290 புதிய பேருந்துகள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம் கோட்டம் சார்பில் 52 பேருந்துகள்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - சேலம் கோட்டம் சார்பில் 41 பேருந்துகள்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கோயம்புத்தூர் கோட்டம் சார்பில் 29 பேருந்துகள்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் கோட்டம் சார்பில் 47 பேருந்துகள்;

கொடியசைத்து
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டம் சார்பில் 104 பேருந்துகள்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி கோட்டம் சார்பில் 17 பேருந்துகள்; என மொத்தம் 58 கோடியே 54 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 290 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சிற்றுந்துகள் துவக்கம்
மக்களின் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம் கோட்டம் சார்பில் 7 சிற்றுந்துகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கோயம்புத்தூர் கோட்டம் சார்பில் 44 சிற்றுந்துகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் கோட்டம் சார்பில் 4 சிற்றுந்துகள், என மொத்தம் 9 கோடியே 15 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 55 சிற்றுந்துகள் ஆகியவற்றை கொடியசைத்து துவக்கி வைத்து, 5 பேருந்து ஓட்டுநர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பேருந்துகளுக்கான சாவிகளை வழங்கினார்.

விமோசனம் கிடைத்தது
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை முதல்வர் பதவியிழந்தார் ஜெயலலிதா. இதனை அடுத்து புதிதாக வாங்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள், ஜெயலலிதா வருகைக்காக பல மாதங்களாக அந்தந்த பணிமனைகளிலேயே காத்திருந்தன. இது குறித்து எதிர்கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

முதல்வரானதும்
கோவையை தவிர்த்து சென்னை, கும்பகோணம், நெல்லை உள்ளிட்ட 7 போக்குவரத்து கழகங்களின் பெரிய பணிமனைகளில் இந்தப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா மீண்டும் முதல்வரான பின்னர் 290 புதிய பேருந்துகளை ரைட் சொல்லி துவக்கி வைத்துள்ளார் ஜெயலலிதா
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications