லஞ்சம் இல்லாமல் சார் ஆட்சியர் அலுவலகங்களில் எதுவும் நடக்காது? நீதிபதி கிருபாகரன் சுளீர் கேள்வி?
சென்னை ஆலந்துதூரைச் சேர்ந்த பூபதி என்பவர் ஓராண்டாகியும் பத்திரங்கள் பதிவு செய்யப்படாதது தொடர்பாக ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது அவர் அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பத்திரப்பதிவுத்துறை என்பது ஊழலில் திளைக்கும் துறையாக உள்ளது. லஞ்சம் கொடுக்காமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் எதுவுமே நடக்காது என்ற சூழல் தான் இருக்கிறது என்பது வேதனையான விஷயம்.

சோதனை நடத்தியதா?
லஞ்சத்தைத் தடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதுவரை எத்தனை சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளது.

லஞ்சம் வாங்க தரகர்கள்
3 வாரத்தில் பத்திரங்களை பதிவு செய்து கொடுக்க வேண்டும் அல்லது திருப்பிக் கொடுக்க வேண்டும். ஆனால் பம்மல் சார்பதிவாளர் ஓராண்டாகியும் மேல் ஆவணங்களை வைத்திருந்தது ஏன். பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சப்பணம் பெற்று கொடுப்பதற்காகவே தனியாக தரகர்கள் இருக்கிறார்கள் என்பது அரசுக்கு தெரியுமா?

எவ்வளவு பணம் பறிமுதல்?
பத்திரப்பதிவு அலுவலகங்களில் 10 ஆண்டில் எத்தனை சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், எவ்வளவு லஞ்சப்பணம் பிடிபட்டுள்ளது என்ற விவரங்கள் உள்ளனவா என்று அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி கிருபாகரன் எழுப்பினார்.

பதிலளிக்க உத்தரவு
மேலும் இந்த வழக்கில் வணிகவரித்துறை செயலாளர், டிஜிபியை எதிர் மனு தாரராக நீதிபதி கிருபாகரன் சேர்த்துள்ளார். நீதிபதி எழுப்பியுள்ள கேள்விகள் தொடர்பாக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 4ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications