லஞ்சம் இல்லாமல் சார் ஆட்சியர் அலுவலகங்களில் எதுவும் நடக்காது? நீதிபதி கிருபாகரன் சுளீர் கேள்வி?
சென்னை ஆலந்துதூரைச் சேர்ந்த பூபதி என்பவர் ஓராண்டாகியும் பத்திரங்கள் பதிவு செய்யப்படாதது தொடர்பாக ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது அவர் அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பத்திரப்பதிவுத்துறை என்பது ஊழலில் திளைக்கும் துறையாக உள்ளது. லஞ்சம் கொடுக்காமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் எதுவுமே நடக்காது என்ற சூழல் தான் இருக்கிறது என்பது வேதனையான விஷயம்.

சோதனை நடத்தியதா?
லஞ்சத்தைத் தடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதுவரை எத்தனை சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளது.

லஞ்சம் வாங்க தரகர்கள்
3 வாரத்தில் பத்திரங்களை பதிவு செய்து கொடுக்க வேண்டும் அல்லது திருப்பிக் கொடுக்க வேண்டும். ஆனால் பம்மல் சார்பதிவாளர் ஓராண்டாகியும் மேல் ஆவணங்களை வைத்திருந்தது ஏன். பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சப்பணம் பெற்று கொடுப்பதற்காகவே தனியாக தரகர்கள் இருக்கிறார்கள் என்பது அரசுக்கு தெரியுமா?

எவ்வளவு பணம் பறிமுதல்?
பத்திரப்பதிவு அலுவலகங்களில் 10 ஆண்டில் எத்தனை சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், எவ்வளவு லஞ்சப்பணம் பிடிபட்டுள்ளது என்ற விவரங்கள் உள்ளனவா என்று அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி கிருபாகரன் எழுப்பினார்.

பதிலளிக்க உத்தரவு
மேலும் இந்த வழக்கில் வணிகவரித்துறை செயலாளர், டிஜிபியை எதிர் மனு தாரராக நீதிபதி கிருபாகரன் சேர்த்துள்ளார். நீதிபதி எழுப்பியுள்ள கேள்விகள் தொடர்பாக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 4ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications