ரூ.90 கோடி வருமானத்துக்கு வரி ஏய்ப்பு செய்த காளீஸ்வரி நிறுவனம்.. ஒப்புக்கொண்டதாக தகவல்!
காளீஸ்வரி நிறுவனம் 90 கோடி ரூபாய் வருமானத்துக்கு வரி செலுத்த வில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: காளீஸ்வரி நிறுவனம் 90 கோடி ரூபாய் வருமானத்துக்கு வரி செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் வரி செலுத்தவில்லை என அந்நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கோல்டு வின்னர் ரீபைன்ட் ஆயில், அதேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், உள்ளிட்ட எண்ணெய் வகைகள் மற்றும் பருப்பு வகைகளை விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்வதாக புகார்கள் குவிந்ததையடுத்து வருமானத் வரித்துறையின் கடந்த 4 நாட்களாக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 54 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
இதில் கைப்பற்ற ஆவணங்களை கணக்கிட்ட போது அந்த நிறுவனம் 90 கோடி ரூபாய் வருமானத்துக்கு வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. இதனை அந்நிறுவனமும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications