வாகனங்களை எரிக்க ‘பாக்கெட் சாராயம்’.. கள்ளக்குறிச்சியில் தீ வைக்கப்பட்டது எப்படி? விசாரணையில் பரபர!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரத்தின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்களை கொண்டு, தீ வைக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பள்ளி கட்டிடங்கள், பேருந்துகள், போலீஸ் வாகனம் உள்ளிட்டவை பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு கிடைத்துள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி வன்முறை வாட்ஸ்-அப் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனங்களை எரிக்க பாக்கெட் சாராயம் பயன்படுத்தப்பட்டதாக வெளிவரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்ன சேலம் மாணவி பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூரில் செயல்படும் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 13ஆம் தேதி 3வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

போலீசார் காயம்
பலியான மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடந்தது. நேற்று முன்தினம் சிறிதாக தொடங்கிய இந்தப் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட நிலையில் கல்வீச்சு தாக்குதல்களும் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் டிஐஜி, 2 எஸ்.பி.க்கள் உள்பட 67 போலீஸார் காயமடைந்தனர்.

தீவைத்து எரிப்பு
மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியதுடன், மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களையும் தீ வைத்து எரித்தனர். இந்த வன்முறையில் 27 பேருந்துகள் உள்பட மொத்தம் 67 வாகனங்களை கொளுத்தப்பட்டன. பள்ளியின் கட்டிடங்களும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவியது. கள்ளக்குறிச்சி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சிபிசிஐடி விசாரணை
கள்ளக்குறிச்சி பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 300ற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பள்ளியின் கட்டிடங்கள், பேருந்துகள் உள்ளிட்டவை பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவிர விசாரணை
தனியார் பள்ளிக்கு தீவைத்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு எதிரான போராட்டத்திற்கு வாட்ஸ்-அப் மூலம் அழைப்பு விடுத்தவர்களை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடத்திற்கு எப்படி தீ வைக்கப்பட்டது, போராட்டக்காரர்களுக்கு தீ வைக்கும் அளவிற்கு எப்படி பொருட்கள் கிடைத்தது என ஆராய்ந்து வருகின்றனர்.

பாக்கெட் சாராயம்
இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்களை பேருந்துகள் மற்றும் பள்ளி அலுவலகத்தில் தூக்கி வீசி அதன் மீது தீ வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஒரு வீடியோவை கைப்பற்றிய போலீசார் அது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் சாராய பாக்கெட் கிடைத்தது எப்படி என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு நடத்தியுள்ளனர்.
Recommended Video

சாராய பாக்கெட்டுகள்
தமிழகத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோத பாக்கெட் சாராய பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட திண்டிவனம் அருகே புதுச்சேரி சாராய பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications