மீனவர்களை மீட்க கோரி குழித்துறையில் 12 மணிநேரம் நடைபெற்ற எழுச்சிமிகு ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!!
ஓகி புயலில் சிக்கிய 1000-க்கும் அதிகமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி குழித்துறையில் 12 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற எழுச்சிமிகு போராட்டம் முடிவுக்கு வந்தது.
Recommended Video

குழித்துறை: ஓகி புயலில் சிக்கிய 1000-க்கும் அதிகமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி குழித்துறையில் 12 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற எழுச்சிமிகு போராட்டம் முடிவுக்கு வந்தது. தூத்தூர் பங்குத் தந்தையின் கோரிக்கையை ஏற்று நள்ளிரவில் மீனவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முதல்வர் பழனிசாமி நேரில் வந்து உறுதியளிக்கக் கோரியும் குழித்துறை ரயில் நிலையத்தில் சுமார் 12 மணி நேரமாக 8 கிராம மக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நண்பகல் 12 மணியளவில் தொடங்கிய போராட்டம் நள்ளிரவிலும் நீடித்தது.

மக்கள் ஏற்க மறுப்பு
காணாமல் போன மீனவர்கள் அனைவரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்தார். எனினும் மக்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து கோஷமிட்டு வந்தனர்.

தேடுதல் வேட்டை தொடரும்
கடைசி மீனவர் கிடைக்கும் வரை தேடுதல் வேட்டை தொடரும், மக்கள் அமைதி காக்குமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டார். ஆனால் நேற்று அளித்த வாக்குறுதியையே இன்றும் ஆட்சியர் அளிப்பதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

மீனவர்கள் கொந்தளிப்பு
சேதத்தை சீர்படுத்த ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுமா, மக்கள் பிரச்னையை தீர்க்காத அமைச்சர் எதற்கு என்று மீனவர்கள் கடுமையான கொந்தளித்தனர். மாவட்ட ஆட்சியரால் எந்த தீர்வும் எட்டப்படாது, முதல்வர் வந்து உறுதியளிக்க வேண்டும் என்றனர்.

மக்கள் தீர்க்கம்
துப்பாக்கியால் சுட்டால் கூட ஒரு தீர்வு கிடைக்காத வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று மீனவர்கள் தொடர்ந்து முழக்கமிட்ட்னார். இத்தனை மக்களிடமும் பேச முடியாது முக்கியமான 10 பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆட்சியர் விடுத்த அழைப்பை ஏற்கவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மறுத்தனர் இதனால் மாவட்ட ஆட்சியரின் சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் தூத்தூர் பங்குத் தந்தை ஆண்ட்ரூஸ் விடுத்த அழைப்பை ஏற்று மீனவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.இப்போராட்டம் வாபஸ் பெறப்ப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications