செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு பற்றி ஹைகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை: ஆளுநரிடம் கருணாநிதி மனு
சென்னை: ஆளுநர் ரோசையாவை இன்று மாலை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, செம்பரம்பாக்கம் ஏரி நீரை முன் அறிவிப்பின்றி அதிக அளவுக்கு திறந்துவிட்டதால் சென்னையில் அழிவு ஏற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து ஹைகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய 5 பக்க மனுவை அளித்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழக ஆளுநர் ரோசையாவை இன்று மாலை 5.30 மணியளவில் கவர்னர் மாளிகையில் சந்தித்தார். அவருடன், திமுக பொருளாளர் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி ஆகியோரும் ரோசய்யாவை சந்தித்தநர்.

அப்போது, 5 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனு ஒன்றை ஆளுநரிடம் கருணாநிதி கொடுத்தார். மழை நிவாரண பணிகளில் ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் கருணாநிதி அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென முன் அறிவிப்பின்றி 35 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட்டதால் சென்னையில் பெரும் அழிவு ஏற்பட்டதாக வெளியான தகவல் குறித்து, ஹைகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். மழையை எதிர்கொள்ள மாநில அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய கருணாநிதியிடம், வெள்ள சேத தடுப்பு விவகாரத்தில் ஹைகோர்ட் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ததோடு, நிவாரண பணிகளில், மத்திய, மாநில அரசுகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை என்று கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கருணாநிதி, நிவாரண பணிகள் பற்றி ஹைகோர்ட் நீதிபதிகள் கூறிய கருத்தில் உண்மையுள்ளது என்றார்.
ஆளுநர் ரோசய்யாவை கருணாநிதி சந்தித்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications