நிலங்களை ஆக்கிரமிக்கும் கருவேல மரங்கள் .... விவசாயிகள் வேதனை
விவசாய நிலங்களில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நெல்லை: பிசான பருவத்திற்கு பாபநாசம் அணை திறக்கப்பட்ட போதிலும் கருவேல மரம் ஆக்கிரமிப்பால் விவசாயிகள் நடவு செய்ய முடியுமா? என்று தயக்கத்தில் உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒராண்டுக்கும் மேலாக கடும் வறட்சி நிலவி வருகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித்ததால் பாபநாசம் அணை வறண்டு காணப்பட்டது.

இதனால் பிசான நெல் சாகுபடி கைவிடப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுபாடும் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு ஜூலை மாதத்தில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழையும் ஏமாற்றம் அளித்தது.
ஆனால் அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் ஓரளவு மழை பெய்ததாலும், அது செப்டம்பர் மாதம் வரை நீடித்ததால் அணைகளுக்கு ஓரளவுக்கு நீர் வரத்து இருந்தது. பருவமழை தவறி தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க முடியவில்லை.
இதனால் பிசான நெல் சாகுபடிக்கு கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி தான் தண்ணீர் திறக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை அக் 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடுவது வழக்கம். தீபாவளி பண்டிக்கை அன்று பலத்த மழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக அன்று வெயிலே அடித்தது. தற்போது நெல்லை மாவட்டத்தில் 2 ஆயிரம் ஹெக்டர் பாசன நிலத்தில் நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மழை இல்லாததால் பிசான நெல் சாகுபடியை துவங்க விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மேலும் அணைகளிலிருந்து தண்ணீர் வரும் தடங்களில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் முழுமையாக தண்ணீர் வந்து சேருமா என்றும் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications