புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
புதுவை: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர்.
கிரண் பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே கடும் மோதல்கள் இருந்து வருகின்றன. மாநில உரிமைகளில் கிரண் பேடி தலையிடுகிறார் என்பது முதல்வர் நாராயணசாமி முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டாகும்.

நியமன எம்எல்ஏக்களை நியமித்தது, புதுவையில் அவ்வப்போது ஆய்வு செய்வது என்று அதிரடி காட்டி வருகிறார் கிரண் பேடி. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் வழக்கம் போல் ஈடுபடும் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் டுவிட்டரிலும் அவர் சில கருத்துகளை பதிவு செய்து வருகிறார். இன்றைய தினம் அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. தனது டுவிட்டர் கணக்கை மர்மநபர்கள் முடக்கி உள்ளதாக கிரண்பேடி வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications