சுயநலத்திற்காக சமுதாயத்தின் பெயரில் கட்சி... மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்கிறார் கொ.ஜ.க தலைவர்!
சென்னை: தங்கள் சுயநலத்திற்காக சமுதாயத்தின் பெயரில் கட்சி ஆரம்பித்து, திராவிடக் கட்சிகளிடம் பேரம் பேசுபவர்களுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்துள்ளார் கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் நெருங்கிவிட்டது. கும்பலைக் கூட்டி கூட்டம் எனக் காட்டி தேர்தலுக்கு தேர்தல் திராவிடக் கட்சிகளிடம் மாறி மாறி கூட்டணி பேசும் சமுதாயத்தின் பெயரில் கட்சிகள் நடத்தும் தலைவர்கள் முதல் லெட்டர் பேட்(Letter Pad) கட்சி தலைவர் வரை தாங்கள் சார்ந்த சமுதாயத்தின் பெயரில் லெட்டர் பேட்(Letter Pad)-ல் கட்சிப்பெயரை அடித்துக்கொண்டு பணத்திற்காகவும், பதவிக்காகவும் நீண்ட வரிசையில் காத்திருந்து திமுக,அண்ணா திமுக கட்சிகளுக்கு தங்கள் ஆதரவை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கொங்கு மண்டலத்திலும், கொங்கு சமுதாயத்தின் பெயரில் கட்சிகள் ஆரம்பித்து கூட்டணிக்கு அழைப்பு வராதா என்று கூனிக்குறுகி காத்துக் கிடக்கின்றார்கள். இவர்கள் சார்ந்த சமுதாயத்தின் மக்கள் இவர்கள் சுயநலத்தை நன்கு அறிவார்கள். இவர்கள் எந்த கட்சிக்கு ஆதரவு கொடுத்தாலும் மக்கள் இவர்களுக்கும், இவர்கள் சார்ந்த கட்சிக்கும் சரியான பாடம் புகட்டுவார்கள்.
48 ஆண்டு காலமாக தமிழக மக்களுக்கு மதுவையும், இலவசத்தையும் கொடுத்து, மனிதவளத்தை சீரழித்த திராவிடக்கட்சிகளுக்கு மாற்றம் தேவையென மக்கள் மனதார நினைக்கின்றார்கள். தமிழக மக்களின் நலனில் அக்கறையுள்ள ஒவ்வொரு குடிமகனின் மனதிலும் மாற்றம் என்ற மந்திரச்சொல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
திராவிடம் போதாது என்று புதிதாக தேசிய திராவிடம் தமிழ்நாட்டைக் காப்பதாகக் கூறி கூட்டணி அமைத்தாலும், தேர்தலை சந்தித்தாலும் திராவிடம் என்ற வார்த்தையை மக்கள் நம்பத் தயாராக இல்லை.இல்லாத ஒன்றை இருப்பதாக மக்கள் எத்தனை காலத்திற்குத் தான் நம்பிக்கொண்டிருப்பார்கள்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications