பொங்கலை முன்னிட்டு விற்பனைக்கு குவியும் பொருட்கள்.. மக்கள் கூட்டத்தால் திணறும் கன்னியாகுமரி!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் கரும்பு, மஞ்சள், பானைகள் உள்ளிட்ட பொருட்கள் குவிந்து வருவதால் அதை வாங்குவதற்காக பொது மக்கள் சந்தையில் அலைமோதி வருகின்றனர்.
நாகர்கோவில்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் கரும்பு, மஞ்சள், பானைகள் உள்ளிட்ட பொருட்கள் குவிந்து வருவதால் அதை வாங்குவதற்காக பொது மக்கள் சந்தையில் அலைமோதி வருகின்றனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14ம்தேதி கொண்டாடப்படுகிறது. நாளை (13ம்தேதி) போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திலும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளன. வீடுகளில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளும் நடந்த வண்ணம் உள்ளன.
பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் போகி ஆகும். எனவே வீடுகளில் தேவையில்லாத பொருட்களை தீ வைத்து கொளுத்துவார்கள். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் போகி கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்குவதிலும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். கரும்பு, மஞ்சள் கிழங்கு, பனங்கிழங்கு, பனை ஓலை உள்ளிட்டவை விற்பனைக்காக ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளன.
மேலும் பொங்கல் சீர்வரிசை பொருட்கள் அளிப்பதற்காக பித்தளை மற்றும் வெண்கல பானைகள் வாங்குவதிலும் மக்கள் ஆர்வமாக உள்ளனர். மண் பானைகளும் பல்வேறு விதமான வகைகளில் விற்பனைக்காக வந்துள்ளன.
குமரி மாவட்டத்தில் வடசேரி, ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், மார்த்தாண்டம், திங்கள்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக கரும்புகள் வந்து குவிந்துள்ளன. திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்புகள் வந்துள்ளன.
ராஜபாளையம், நிலக்கோட்டை, திருச்செந்தூர், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சள் குலைகள் மற்றும் பனங்கிழங்கு வியாபாரிகள் வந்துள்ளனர். கரும்பு, பனங்கிழங்கு, காய்கறிகளின் விலைகள் கடந்த ஆண்டை விட கடுமையாக உயர்ந்துள்ளன.
ஜி.எஸ்.டி. வரி காரணமாக வெண்கல மற்றும் பித்தளை பாத்திரங்கள் கடந்த ஆண்டை விட கிலோவுக்கு ரூ.100 வரை அதிகரித்துள்ளன. கரும்பு ஒரு கட்டு ரூ.500 முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டில் 15 கரும்புகள் உள்ளன. தனியாக ஒரு கரும்பின் விலை தரத்துக்கேற்ப ரூ.50, 60 வரை விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் கிழங்கு ரூ.30, 50, 80 என பல்வேறு வகைகளில் தரத்துக்கேற்ப விற்பனையாகிறது. பனங்கிழங்கு ஒரு கட்டு ரூ.120, ரூ.140 என விற்பனையாகிறது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications