காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும்.. வானிலை மையம் தகவல்
வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தென் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும் என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மினிகாய் தீவுக்கு தென்கிழக்கே 130 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

படிப்படியாக வலுவிழக்கும்
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக மத்திய கிழக்கு அரபிக் கடலில் வலுவிழக்கும் என்றும் அவர் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 20 செ.மீ. மழை பெய்துள்ளது. பாபநாசத்தில் 19 சென்டி மீட்டர் மழையும் செங்கோட்டையில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

படிப்படியாக நகரும்
குமரி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு திசையை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக நகரும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

2 நாட்களுக்கு மழை
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

மீனவர்கள் எச்சரிக்கை
மேலும் மார்ச் 14, 15 ஆகிய தேதிகளில் பலத்த காற்று வீசும் என்பதாலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதாலும் குமரி மற்றும் மாலத்தீவு கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications