தொடரும் கனமழை: மதுராந்தகம் ஏரி நிரம்பியது
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: கனமழை பெய்து வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நிரம்பியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தலைநகரான சென்னை மழையை சமாளிக்க முடியாமல் திணறுகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நிரம்பியுள்ளது. 23.3 அடி கொள்ளளவு கொண்ட ஏரி நிரம்பியுள்ளது. ஏரிக்கு 200 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
கிள்ளியாறு கலங்களில் 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரி நிரம்பியுள்ளது அப்பகுதி மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது. கனமழை தொடர்வதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications