விவசாய பணியின்போது டிராக்டரில் மின் வயர் சிக்கி தொழிலாளி மரணம்: வீடியோ
வயலில் டிராக்டரை வைத்து ராஜகோபலன் என்பவர் உழுதுகொண்டிருந்த போது, உடன் உட்கார்ந்திருந்த முத்து முருகன் என்பவர் மின் வயர் தாக்கி உயிர் இழந்தார்.
Subscribe to Oneindia Tamil
தேனி: வயலில் உழவு ஓட்டிக்கொண்டிருந்த போது டிராக்டரில் மின்வயர் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ளது நாச்சியார்புரம். இங்கு ராஜகோபால் என்பவர் டிராக்டரில் முத்துமுருகன் என்கிற தொழிலாளியையும் வைத்துக்கொண்டு தன் வயலை உழுதுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்வயர், டிராக்டரில் சிக்கியுள்ளது. அதில் முத்துமுருகன் வண்டியிலிருந்து தூக்கியெறியப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications